தொண்டாமுத்தூர் தொகுதியில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் முடிவுற்ற வளர்ச்சிபணிகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார். மேலும், புதிய பணிகளுக்கு அடிக்கல்லும் நாட்டினார்.

கோவை : தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் முடிவுற்ற வளர்ச்சிபணிகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார். மேலும், புதிய பணிகளுக்கு அடிக்கல்லும் நாட்டினார். 

வேடபட்டி பேரூராட்சியின் மூலம் நரசீபுரம் சாலை சிறுபாலத்தை அகலப்படுத்தி மற்றும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்திலிருந்து ரூ. 1 கோடி மதிப்பில் நம்பியழகன்பாளையம் மெயின்ரோடு முதல் பாலம் வரை வடிகால், வன்னியம்பாளையத்தில் வடிகால், குரும்பபாளையத்தில் வடிகால் அமைத்தல், மற்றும் மருதப்ப நகர், சின்னத்தம்மன் நகரில் தார்சாலை, ஆண்டிபாயைம் கிரீன் சிட்டி, எம்.ஜி.ஆர். வீதி மற்றும் ராஜீவ் வீதியில் தார்சாலை அமைக்கும் பணி, குரும்பாளையத்தில் பொது வினியோகக் கடை கட்டுதல் ஆகிய பணிகளுக்கு பூமி பூஜை போடப்பட்டது. 



மேலும், வேடப்பட்டி பேரூராட்சி நம்பியழகன்பாளையத்தில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 51 பயனாளிகளுக்கு வீடு கட்ட உத்திரவு ஆணையினை அமைச்சர் வழங்கினார். நெடுஞ்சாலைத் துறை மூலம் மாதம்பட்டி - கரடிமடை சாலை முதல் குப்பனூர் வரை ஒருவழிச் சாலையை இடைவழிச் சாலையாக அகலப்படுத்தி ரூ. 1.96 கோடி மதிப்பில் மேம்பாடு செய்யும் பணி, மற்றும் கோவை - சிறுவாணி சாலை முதல் மத்திபாளையம் சாலை வரை ஒருவழிச் சாலையை இடைவழிச் சாலையாக ரூ.199 கோடி மதிப்பில் அகலப்படுத்தி மேம்பாடு செய்யும் பணி, கோவை - சிறுவாணி சாலை இருட்டுப்பள்ளம் பகுதியில் ரூ.1.12 கோடி மதிப்பில் மேம்பாடு மற்றும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி;, கோவை சிறுவாணி சாலையில் இடைவழிச் சாலையாக உள்ளதை இருவழிச் சாலையாக ரூ1.63 கோடி மதிப்பில் அகலப்படுத்தியும், மேம்பாடு மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணி ஆகிய பணிகள் மேற்கொள்ளப் பூமி பூஜை போடப்பட்டுள்ளது.

தொண்டாமுத்தூர் பேரூராட்சி சந்தைப்பேட்டை, டி.என்.ஆர்.நகர், புத்தூர் ரோடு ஜல்லிகுழி வீதியில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்திலிருந்து ரூ. 1 கோடி மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணி, மாரியம்மன் கோவில் அருகில் இயக்கம் மற்றும் பராமரிப்பு இடைவெளி நிரப்பும் நிதியிலிருந்து ரூ. 30 லட்சம் மதிப்பில் சமுதாய நலக்கூடம் அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை போடப்பட்டுள்ளது. மேலும், 1-வது வார்டு வண்டிக்காரனூரில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்திலிருந்து ரூ. 1 கோடி மதிப்பில் கான்கீரிட் சாலையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அமைச்சர் திறந்து வைத்தார். 

தாளியூர் பேரூராட்சி 5-வது வார்டு வேடபட்டி எல்லை சித்திரை சாவடி வாய்க்கால் முதல் மாமரத்து வயல் வரை நபார்டு திட்டத்திலிருந்து ரூ. 1கோடி மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணி, உலியம்பாளையம்- குளத்துப்பாளையம் சாலையை ஒருவழிச் சாலையை இடைவழிச் சாலையாக ரூ. 1.99 கோடி மதிப்பில் அகலப்படுத்தி மேம்பாடு செய்யும் பணி, தமிழ்நாடு நகர்ப்புற சாலை கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்திலிருந்து ரூ. 1 கோடி மதிப்பில், பூச்சியூர் - ஐயப்பன் கோவில் முதல் ஜோதி கார்டன் வரை வடிகால் மற்றும், ராசிகார்டன் முதல் ஆர்.ஆர். அபிநவ் அபார்ட்மெண்ட் வரை தார்சாலை, அமைக்கும் பணிகளுக்கு பூமிபூஜை போடப்பட்டது. மேலும், கலிக்கன் நாயக்கன் பாளையத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 3 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடையும், உள்கட்டமைப்பு இடைவெளி நிரப்பும் நிதியிலிருந்து ரூ. 50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய அலுவலக கட்டிடத்தையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு எஸ்.பி. வேலுமணி திறந்து வைத்தார். 

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன்சங்கர் ராஜ், உதவி இயக்குநர் பேரூராட்சிகள் கணேஷ்ராம், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் சிற்றரசன், வட்டாட்சியர் முரளி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.  

Newsletter

கோவை மேயர் வ.உ.சி. மைதானத்தில் சர்வதேச நீச்சல் குளம் கட்டுமான பணிகளை ஆய்வு

கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சர்வதேச அளவிலான நீச...

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...

புலியகுளத்தில் ஆம்புலன்ஸ் பேட்டரி திருட முயன்ற இரு இளைஞர்கள் கைது

கோவை புலியகுளம் ரோடில் ஆம்புலன்ஸ் பேட்டரிகளை திருட முயன்ற இரு வாலிபர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களால் கையும்...

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...