அன்னூர் அருகே அரிசிக்கடையில் நகை மற்றும் ரொக்கம் கொள்ளை

கோவை : கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள அரிசிக்கடையில் 4 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கத்தை மர்ம நபர் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை : கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள அரிசிக்கடையில் 4 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கத்தை மர்ம நபர் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 



மேட்டுப்பாளையத்தை அடுத்த அன்னூர் காவல்நிலையம் எதிரே விஜியகுமார் என்பவர் விஜியலட்சுமி என்ற பெயரில் அரிசி கடையை நடத்தி வருகிறார். இவர், நேற்று இரவு வழக்கம்போல, தனது வேலைகளை முடித்து விட்டு கடையை பூட்டி விட்டுச் சென்றுள்ளார். இந்நிலையில், நள்ளிரவு ஒரு மணியளவில் கடையின் பூட்டை கடப்பாறையால் உடைத்து மர்ம நபர் உள்ளே நுழைந்துள்ளான். அங்கு, அரிசி கடையின் கள்ளாவில் வைத்திருந்த ரூ. 1 லட்சம் ரொக்கம் மற்றும் அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் நான்கு சவரன் தங்கநகை ஆகியவற்றைக் கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றான்.

பின்னர், மீண்டும் சிறிது நேரத்திற்குப் பிறகு, கொள்ளை நடைபெற்ற இடத்திற்கு வந்த அந்த மர்ம நபர், தடயங்களை ஏதேனும் விட்டு சென்றுள்ளானா என தேடி பார்த்து விட்டு மீண்டும் கடையை விட்டு சென்றான். இந்த நிகழ்வுகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. பின்னர், காலையில் கடையை திறந்த உரிமையாளர் இந்த திருட்டு சம்பவம் குறித்து அதிர்ச்சியடைந்த விஜியகுமார், அன்னூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

அன்னூர் காவல்நிலையத்தில் போதிய காவலர்கள் பற்றாக்குறையைப் பயன்படுத்தி, போலீசாருக்கு சவால் விடும் வகையில் இதுபோன்ற தொடர் திருட்டு சம்பவங்களை கொள்ளையர்கள் மிகவும் துணிவுடன் செய்து வருகின்றனர். எனவே, மாவட்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து கொள்ளை சம்பவத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...