கோவையில் இருந்து கர்நாடகத்திற்கு இயக்கப்படும் பேருந்துகள் நிறுத்தம்

கோவை: காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் இன்று முழு அடைப்பு நடைபெறுவதைத் தொடர்ந்து, கோவையில் இருந்து கர்நாடகத்திற்கு இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன.



கோவை: காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் இன்று முழு அடைப்பு நடைபெறுவதைத் தொடர்ந்து, கோவையில் இருந்து கர்நாடகத்திற்கு இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், அதனை அமைக்கக் கோரியும் தமிழகம் முழுவதும் இன்று எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் கடையடைப்பு மற்றும் பேருந்துகள் நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. 

அதன்படி, இன்று தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான பேருந்துகள் இயங்காமல் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகத்திற்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. 

கோவையைப் பொறுத்தவரையில், கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு 12 பேருந்துகளும், மைசூருக்கு 40 பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் நிலவும் இந்த சூழ்நிலை காரணமாக, கோவையிலிருந்து கர்நாடக மாநிலத்திற்கு இயக்கப்பட்டு வந்த 52 பேருந்துகளும் பாதுகாப்பு கருதி நிறுத்தப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக கார்நாடகா செல்லும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...