கோவையில் முழு அடைப்பு, சாலை மறியல், போராட்டங்கள்: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிப்பு தெரிவிக்கும் வகையில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் எடுத்த முடிவின்படி, இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. தி.மு.க. கூட்டணி கட்சிகள் நடத்தும் இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு பா.ம.க., த.மா.கா. உள்ளிட்ட கட்சிகளும், அனைத்து விவசாய அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து இருக்கின்றன.

கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிப்பு தெரிவிக்கும் வகையில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் எடுத்த முடிவின்படி, இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. தி.மு.க. கூட்டணி கட்சிகள் நடத்தும் இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு பா.ம.க., த.மா.கா. உள்ளிட்ட கட்சிகளும், அனைத்து விவசாய அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து இருக்கின்றன.



கோவையைப் பொறுத்தவரையில் முழுமையாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளன. இதனால் பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசைக் கண்டித்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் சாலை மறியல், ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

இன்று காலை கோவை ரயில் நிலையத்திற்குள் புகுந்த தி.மு.க., ம.தி.மு.க., எஸ்.டி.பி.ஐ., விடுதலைச் சிறுத்தைகள், சி.பி.எம், போன்ற பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொண்டர்கள் ரயில் தண்டவாளத்தில் இறங்கி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.



மேலும், அவர்கள் லங்கா கார்னர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் டவுன்ஹால் வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

போலீசாருடன் கடும் வாக்குவாதத்திற்குப் பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைதாகினர்.



இதே போல், பீளமேடு பகுதி அவினாசி சாலையில் இன்று காலை தி.மு.க., காங்கிரஸ்., சி.பி.எம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் எப்போதும் பரப்பாக காணப்படும் அவினாசி சாலை ஸ்தம்பித்தது. சுமார் அரை மணி நேரத்திற்குப் பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.



வால்பாறை: வால்பாறையில் 500-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து இயக்க வேண்டிய 43 பேருந்துகளில் 37 பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. அந்த பேருந்துகளை அண்ணா தொழிற்சங்க ஊழியர்கள் இயக்கி வருகின்றனர். 



மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை, காரமடை, பெரியநாயக்கன்பாளையம் போன்ற பகுதிகளில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. சிறு குறு தொழில் நிறுவனங்கள், காய்கறி சந்தை, கைத்தறி உற்பத்தி கூடங்கள் என அனைத்தும் இயங்கவில்லை.

குறைந்த அளவிலான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கோடை விடுமுறை காரணமாக வந்துள்ள சுற்றுலா பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...