கூடலூர் அருகே காட்டுயானை தாக்கியதில் கூலி தொழிலாளி பலி

நீலகிரி: கூடலூர் அருகே எழுமரம் பகுதியில் நேற்று இரவு காட்டு யானை தாக்கியதில் விஜகுமார் என்ற கூலி தொழிலாளி பலியானார்.

நீலகிரி: கூடலூர் அருகே எழுமரம் பகுதியில் நேற்று இரவு காட்டு யானை தாக்கியதில் விஜயகுமார் என்ற கூலி தொழிலாளி பலியானார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள எழுமரம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். கூலி தொழிலாளியான இவர் நேற்று இரவு 10.30 மணியளவில் தனது உறவினரை அவரது வீட்டில் விட்டுவிட்டு, வீடு திரும்பியுள்ளார்.

அப்போது சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த காட்டு யானை விஜயகுமாரை தாக்கியது. இதில் விஜயகுமாருக்கு இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அலறல் சத்தம் கேட்ட பொதுமக்கள் அங்கு சென்று பார்த்த போது விஜயகுமார் இறந்து போனது தெரிய வந்தது.

தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். இந்த சம்பவம் குடியிருப்பு பகுதியில் நடந்ததால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். தற்போது அங்கு முகாமிட்டுள்ள காட்டு யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...