கோவையில் 30 இடங்களில் போராட்டம்: பெண்கள் உட்பட 2,363 பேர் கைது

கோவை: காவிரி விவகாரம் தொடர்பாக கோவையில் போராட்டம் நடத்திய 245 பெண்கள் உட்பட 2,363 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை: காவிரி விவகாரம் தொடர்பாக கோவையில் போராட்டம் நடத்திய 245 பெண்கள் உட்பட 2,363 பேரை போலீசார் கைது செய்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், முழுமையான பந்த் நடைபெற்று வருகிறது.

கர்நாடகா தேர்தலை கருத்தில் கொண்டே மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருவதாக தமிழகம் முழுதும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் மத்திய அரசைக் கண்டித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

கோவை:

கோவையைப் பொறுத்தவரையில், பிற்பகல் 12 மணி நிலவரப்படி 30 இடங்களில் நடைபெற்ற சாலை மறியல், ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 245 பெண்கள் உட்பட 2363 கைது செய்யப்பட்டுள்ளனர். நேரு நகர், சரவணம்பட்டி போன்ற பகுதியில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது கல் வீசப்பட்டது. இதனால் அந்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.



கோவை மாநகர் முழுவதும் 1200 போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் காவல் நிலைய போலிசார் உட்பட தமிழ்நாடு சிறப்பு காவலர்கள் 150 பேரும், ஆயுதப்படை காவலர்கள் 225 பேரும், ஊர்காவல் படையை சேர்ந்தவர்கள் 175 பேரும் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

90 சதவீத கடைகள் மூடியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் போராட்டங்கள் நடக்கும் பகுதியை தவிர முக்கிய சாலைகள் வெறிச்சோடியே காணப்படுகிறது.

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...