பணிகளைச் சிறப்பாக மேற்கொண்ட 40 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டு

கோவை : கோவை மாநகராட்சியில் வரிவசூல் பணிகளை சிறப்பாக மேற்கொண்ட 40 பேருக்கு, மாநகராட்சி ஆணையாளர் க.விஜயகார்த்திகேயன் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கிப் பாராட்டினார்.

கோவை : கோவை மாநகராட்சியில் வரிவசூல் பணிகளை சிறப்பாக மேற்கொண்ட 40 பேருக்கு, மாநகராட்சி ஆணையாளர் க.விஜயகார்த்திகேயன் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கிப் பாராட்டினார். 



கோவை மாநகராட்சி அலுவலக பிரதான கூட்டரங்கில் நிகழ்ச்சியில், உதவி ஆணையாளர்கள் டி.ஆர்.ரவி (தெற்கு மண்டலம்), வி.சரவணன் (வடக்கு மண்டலம்), உதவி வருவாய் அலுவலர்கள் எம்.கார்த்திகேயன் (கிழக்கு மண்டலம்), எஸ்.மதுசூதனன் (மேற்கு மண்டலம்), டி.தமிழ்வேந்தன் (தெற்கு மண்டலம்), ஆர்.காளம்மாள் (வடக்கு மண்டலம்), எம்.எம்.கனகராஜ் (மத்திய மண்டலம்) மற்றும் சிறப்பு வரி ஆய்வாளர்கள் 5 பேருக்கும், உதவியாளர்கள் 10 பேருக்கும், இளநிலை உதவியாளர்கள் 6 பேருக்கும், வரிவசூலர் 4 பேருக்கும், பதிவுறுஎழுத்தர் 8 பேருக்கும் ஆக மொத்தம் 40 பேருக்கு சிறந்த வரிவசூல் செய்தமைக்காக பாராட்டு சான்றிதழ்களை மாநகராட்சி ஆணையாளர் க.விஜயகார்த்திகேயன் வழங்கிப் பாராட்டினார். 

கோவை மாநகராட்சி 2017-18-ம் நிதியாண்டின் சொத்துவரி சராசரியாக 95 சதவீதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதில், கிழக்கு மண்டலம் மற்றும் வடக்கு மண்டலத்தில் 96 சதவீதமும், மேற்கு மண்டலம் மற்றும் மத்திய மண்டலத்தில் 95 சதவீதமும் மற்றும் தெற்கு மண்டலத்தில் 90 சதவீதமும் சொத்துவரி வசூலிக்கப்பட்டுள்ளது. மண்டல வாரியாக சிறப்பாக சொத்துவரி வசூல் பணிபுரிந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், உதவி ஆணையாளர்கள் கே.ரவிக்குமார், செந்தில்குமார் ரத்தினம், ஜெ.ரவிக்குமார், அண்ணாதுரை, குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...