"சட்டவிரோதமாக மரங்களை வெட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சட்டம் தேவை"

கோவை : உரிய அனுமதியின்றி மரங்களை வெட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையிலான சட்டம் இயற்றப்பட வேண்டும் எனக் கோவையில் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை : உரிய அனுமதியின்றி மரங்களை வெட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையிலான சட்டம் இயற்றப்பட வேண்டும் எனக் கோவையில் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 



உக்கடம் பகுதியை அடுத்த கரும்புக்கடை, சவுகார் நகரில் வசித்து வரும் அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் வார்டு உறுப்பினர் முத்து என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டின் அருகே உள்ள மரத்தை வெட்ட முயற்சித்துள்ளார். ஆனால், ஓசை தொண்டு நிறுவனம் மற்றும் அப்பகுதியினரின் கடும் எதிர்ப்பால் அந்த செயல் கைவிடப்பட்டது. இந்த நிலையில், கட்டுமானப் பணிக்காக 15 ஆண்டுகள் பழமையான போதி மரத்தை வெட்டியுள்ளார். இதையறிந்த ஓசை தொண்டு நிறுவனத்தின்  அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், வருவாய் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள் முன்னாள் வார்டு உறுப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து, 10 மரக்கன்றுகளை நடவு செய்து பராமரிப்பதாக அவர் உறுதியளித்தார். 

"சட்டவிரோதமாக இதுபோன்று மரங்களை வெட்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே, உரிய அனுமதியின்றி மரங்களை வெட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையிலான சட்டம் இயற்றப்பட வேண்டும். மனிதர்கள் வாழ்வதற்கு மரங்கள் இன்றியமையாதது என்பதை உணர வேண்டும்", என ஓசை தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சையத் கூறினார். 

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...