வால்பாறையில் ஆட்டைக் கொன்ற சிறுத்தைப்புலியால் பொதுமக்கள் பீதி

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் குட்டியிட்டு 3 தினங்களே ஆன ஆட்டை சிறுத்தைப்புலி கடித்துக் கொன்ற சம்பவத்தால், அப்பகுதியில் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் குட்டியிட்டு 3 தினங்களே ஆன ஆட்டை சிறுத்தைப்புலி கடித்துக் கொன்ற சம்பவத்தால், அப்பகுதியில் அச்சத்தில் உறைந்துள்ளனர். 

வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் சிறுத்தைப் புலியின் அட்டகாசம் அதிகமாகக் காணப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடுமலை எஸ்டேட்டில் சைதுல் என்ற 4 வயது சிறுவனை சிறுத்தைப்புலி தாக்கிக் கொன்றது. இந்த பீதியிலிருந்து மக்கள் மீண்டு வருவற்குள் சிறுத்தைப்புலி மீண்டும் வால்பாறை பகுதியில் அட்டகாசம் செய்து வருகிறது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அருகில் குடியிருந்து வரும் தேவசி என்பவரது வீட்டின் மாடியில் நுழைந்த சிறுத்தைப்புலி அவர் வளர்த்து வந்த நாயை பிடித்துச் சென்றது.

அதேபோல, இன்று அதிகாலை வால்பாறை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள டோபி காலனிக்குள் நுழைந்த சிறுத்தைப்புலி, வெள்ளிங்கிரி என்பவர் வளர்த்து வந்த ஆட்டின் கழுத்தில் கடித்துக் கொன்றது. இந்த ஆடு குட்டியிட்டு 3 தினங்களே ஆகிறது. அந்தக் குட்டியும் காயங்களுடன் ஆபத்தான நிலையில் உள்ளது.



மேலும், வால்பாறை கலைஞர் நகர் பகுதியில் நேற்று இரவு சிறுத்தைப்புலியின் நடமாட்டம் அங்கு வைக்கப்பட்டிருக்கும் சி.சி.டி.வி.இ கேமராவில் பதிவாகியுள்ளது. இவ்வாறு வால்பாறை நகருக்குள் தொடர்ந்து சிறுத்தைப்புலியின் நடமாட்டம் காணப்படுவதால் வனத்துறையினர் உடனடியாக கூண்டு அதனைப் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...