10 நாட்கள் மட்டுமே நடக்கும் உதகை குதிரைப் பந்தயம் : குதிரைப் பந்தய பிரியர்கள் ஏமாற்றம்

நீலகிரி: உதகையில் வரும் மே 12-ம் தேதி தொடங்கவிருக்கும் குதிரைப்பந்தயம் வெறும் 10 நாட்களே நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால், குதிரைப் பந்தய பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

நீலகிரி: உதகையில் வரும் மே 12-ம் தேதி தொடங்கவிருக்கும் குதிரைப்பந்தயம் வெறும் 10 நாட்களே நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால், குதிரைப் பந்தய பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.



உதகையில் பிரசித்தி பெற்ற குதிரை பந்தயமானது ஆண்டுதோறும் ஏப்ரல் 14 ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் வரை நடைபெறுவது வழக்கம். இதனைக் காண அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருவர். எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா இந்தக் குதிரை பந்தய மைதானத்தில் நடந்ததால், இங்கு குதிரைகள் ஓடுதளம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஓடுதளத்தை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. எனவே, இந்த ஆண்டுக்கான குதிரை பந்தயம், தாமதமாக மே 12-ம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆண்டுதோறும் 28 நாட்கள் நடைபெறும் குதிரை பந்தயம், இந்த ஆண்டு மே 12-ம் தேதி முதல் ஜுன் 14-ம் தேதி வரை உள்ள சனி மற்றும் ஞாயிறு தினங்கள் என மொத்தம் வெறும் 10 நாட்கள் மட்டுமே நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பந்தயத்தில் பங்கேற்க உள்ள குதிரைகள் மற்றும் ஜாக்கிகள் ஏப்ரல் 15-ம் தேதி உதகைக்கு வருகை தர உள்ளனர். தேர்வுகள் முடியும் தருவாயில் தொடங்கும் இந்தக் குதிரை பந்தயம் கோடை சீசனின் துவக்க நிகழ்ச்சியாக இருந்து வந்த நிலையில், குதிரை பந்தயம் இந்த ஆண்ட காலதாமதமாக துவங்குகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் குதிரை பந்தய பிரியர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...