நில மோசடி : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கைது

கோவை : சட்டவிரோதமாக ஆவணங்களை தயார் செய்து நில மோசடியில் ஈடுபட்டதாக இணை சார்பதிவாளர் அளித்த புகாரின் பேரில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை : சட்டவிரோதமாக ஆவணங்களை தயார் செய்து நில மோசடியில் ஈடுபட்டதாக இணை சார்பதிவாளர் அளித்த புகாரின் பேரில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். 

சேலம் அம்மா பேட்டையைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (70). இவரது மனைவி சவிதா(60). இவர்களுக்கு ஆர்.எஸ்.புரம் பகுதியில் 4,840 சதுர அடி பரப்பளவிலான இடம் இருந்தது. இந்த இடத்தை 1997-ல் திலகம், அருண் என்பவருக்கு விற்பனை செய்து விட்டனர். ஆனால், இவர்கள் இந்த விற்ற இடத்தின் ஆவணங்களை போலியாக தயாரித்து பல்வேறு மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதில், போலியான கலர் நகலை வைத்து திருப்பூர் குமரன் நகர் பகுதியில் உள்ள கரூர் வைசியா வங்கியில் ரூ. 1.20 கோடி கடன் வாங்கி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டனர்.



பின்னர், பிணையில் வந்த தம்பதியினர் அவர்களது மகனின் உதவியுடன் அடுத்து மீண்டும் மோசடி செய்யத் தொடங்கினர். இதில், திருப்பூரைச் சேர்ந்த பிரசாந்த், சத்தியமங்கலத்தை சேர்ந்த பாக்யராஜ் உள்ளிட்ட பல பேரிடம் போலியான ஒரே பத்திரத்தை வைத்து பல லட்ச ரூபாயைக் கடன் வாங்கி மோசடி செய்துள்ளனர். 



இந்த நிலையில் இடத்தின் உரிமையாளர் அருண், கடந்த ஆண்டு கோவையில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இந்தப் புகாரின் பேரில் விசாரணை செய்த அதிகாரிகள் குற்றம் இருப்பதை உறுதி செய்தனர். அதன்படி, உயர் அதிகாரி ராமசாமி உத்தரவின் பேரில், இணைசார்பதிவாளர் எண்-1 குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரிடம் புகார் அளித்தார். இதனடிப்படையில் குற்றத்தில் ஈடுபட்ட கணவன், மனைவியை கோவை போலீசார் சேலத்தில் இன்று கைது செய்தனர். இந்த மோசடி சம்பவத்தின் முக்கிய குற்றவாளியாகக் கூறப்படும் ராஜமாணிக்கத்தின் மகன் வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ளார். இவரையும் பிடிக்க போலீசார் தீவிரமாகியுள்ளனர்.

இது குறித்து இடத்தின் உரிமையாளர் அருண் கூறியதாவது :- இதுபோன்று ஏமாற்றுபவர்களை சிறையில் இருந்து விடுதலை செய்தால், மேலும் மேலும் மோசடிகள் தொடரும். இதுபோன்ற குற்றங்களை தடுக்க டெக்னிக்கல் முறையை பலப்படுத்த வேண்டும். தனி நபரை ஏமாற்றுவதை விட அரசின் நிறுவனங்களையே ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. இன்னும் எத்தனை நபர்களை ஏமாற்றியுள்ளார்கள் என்பதை போலீசார் விசாரணை செய்து கண்டுபிடிக்க வேண்டும். மேலும், இதுபோன்ற குற்றங்களை தடுக்க வேண்டும், என்றார்.

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...