சொட்டுநீர் பாசனம் மூலம் தயாராகிறது தர்பூசணி

ஈரோடு: சத்தியமங்கலம் வட்டாரப்பகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. சிக்கரசம்பாளையம், புதுகுய்யனூர், வடவள்ளி, ராஜன்நகர், இக்கரை நெகமம்புதூர், அரியப்பம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது விவசாயிகள் தர்பூசணியை பயிரிட்டுள்ளனர்.

ஈரோடு: சத்தியமங்கலம் வட்டாரப்பகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. சிக்கரசம்பாளையம், புதுகுய்யனூர், வடவள்ளி, ராஜன்நகர், இக்கரை நெகமம்புதூர், அரியப்பம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது விவசாயிகள் தர்பூசணியை பயிரிட்டுள்ளனர்.

நடப்பாண்டு பருவமழை பொய்த்து கிணறுகளில் நீர்மட்டம் அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்டது. இதனால் விவசாயிகள் கிணற்றில் கிடைக்கும் சொற்ப நீரைக் கொண்டு சிக்கனமாக விவசாயம் செய்து வருகின்றனர். தோட்டங்களில் பாலித்தீன் பேப்பர் மூலம் சொட்டு நீர்ப்பாசனம் அமைத்து நீர் பயன்பாட்டைச் சிக்கனமாக்கி நிறைவான மகசூல் பெறுகின்றனர். 

தர்பூசணி பயிரிடுவதால் ஏக்கர் ஒன்றுக்கு 30 டன் வரை மகசூல் கிடைக்கும். சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை செலவாகிறது. 60 நாள்களில் அறுவடையாகும் புதிய ரக தர்பூசணிக்கு உரம், மருந்துகள் சொட்டுநீர் மூலம் பாய்ச்சுவதால் உரம் வீணாவதில்லை. மேலும் தற்போது உடலுக்கு தீங்கு விளைவிக்காத பக்கவிளைவுகள் ஏற்படுத்தாத பயோ உரங்கள் மற்றும் நுண்ணூட்ட சத்துக்களைப் பயன்படுத்தி சாகுபடி செய்வதால் நுகர்வோர் தர்பூசணியை விரும்பி வாங்கி பயன்படுத்துகின்றனர். 

அதிக நீர்ச்சத்துள்ள தர்ப்பூசணியை அனைத்து பருவங்களிலும் மக்கள் பயன்படுத்துவதால் இதன் தேவை அதிகமாகி வருகிறது. வியாபாரிகள் நேரடியாக கொள்முதல் செய்து உடனடியாக பணம் பட்டுவாடா செய்வதால் விவசாயிகள் தர்பூசணியை ஆர்வத்துடன் சாகுபடி செய்துவருகின்றனர். 

இதுகுறித்து திருமூர்த்தி என்ற விவசாயி கூறுகையில், கிலோ ரூ.5 க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இதனால், லாபம் குறைவாக உள்ளது. கடந்த ஆண்டு ரூ.9 முதல் ரூ.11 வரை விற்பனையானதால் ஓரளவு நல்ல இலாபம் கிடைத்தது. சத்தி சுற்றுவட்டார பகுதியில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தர்பூசணி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. உற்பத்தி அதிகரித்ததன் காரணமாக விலை குறைவாக விற்பனையாகிறது. அறுவடை செய்யப்படும் தர்பூசணியை வாங்கும் வியாபாரிகள் அவற்றை கேரளா, கர்நாடக மற்றும் மாலத்தீவு போன்ற இடங்களுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர்." என்றார்.

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...