கோவை விமான நிலைய விரிவாக்கம்: தென்னை மரத்திற்கு தலா ரூ.50,000 இழப்பீடு கோரும் விவசாயிகள்

கோவை: கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக வெட்டப்படும் தென்னை மரம் ஒன்றிற்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்க வேண்டும் என தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை: கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக வெட்டப்படும் தென்னை மரம் ஒன்றிற்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்க வேண்டும் என தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பீளமேட்டை அடுத்த சித்ராவில் உள்ள கோவை சர்வேதச விமான நிலையத்தை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய மத்திய, மாநில அரசுகள் ஒப்புதல் அளித்தன. இதையடுத்து, விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக அருகில் உள்ள சின்னியம்பாளையம், நீலம்பூர், இருகூர் போன்ற பகுதிகள் தேர்வு செய்யப்பட்டன. அப்பகுதிகளில் தேர்வு செய்யப்பட்ட இடங்களை அரசு எடுத்துக்கொள்ளும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஆக்கிரமிக்கப்படும் பகுதிகளில் உள்ள நிலங்களுக்கு சதுரஅடிக்கு ரூ. 1,500-யும், விவசாய நிலங்களுக்கு சதுர அடிக்கு ரூ. 900-யும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், ஒருசிலர் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்ய ஒப்புதல் கடிதம் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில், கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக வெட்டப்படும் தென்னை மரம் ஒன்றிற்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரனிடம் தமிழ்நாடு விவசாயிகள் கூட்டமைப்பினர் மனு அளித்தனர். அந்த மனுவில், கூறியிருப்பதாவது, இந்தப் பகுதிகளில் 18 முதல் 25 ஆண்டுகள் விளைச்சல் கொடுத்த தென்னை மரங்களே உள்ளன. ஆண்டுக்கு 200 தென்னை மரங்கள் விளைகின்றன. மேலும், மாசு மற்றும் பூச்சிக் கொல்லிகளில் இல்லாத மண் மற்றும் நிலத்தடி நீர் உள்ளது. குறிப்பாக, இந்தத் தென்னை மரங்கள் அகற்றப்படுவதால், நீரா பானம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது. எனவே, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, விமான நிலைய விரிவாக்கத்திற்காக அகற்றப்படும் தென்னை மரங்களுக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க வேண்டும், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இருகூர், காளப்பட்டி உள்ளிட்ட விமான நிலைய விரிவாக்கத்திற்குட்படுத்தப்படும் பகுதிகளில் சுமார் 3,000 தென்னை மரங்கள் இருக்கின்றன. எனவே, இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் வரும் செவ்வாய்கிழமை விவசாயிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...