திருப்பதி சோதனைச் சாவடியில் கோவையைச் சேர்ந்தவரிடம் துப்பாக்கி பறிமுதல்

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள சோதனைச் சாவடியில் நடத்திய சோதனையின் போது கோவையைச் சேர்ந்தவரிடம் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள சோதனைச் சாவடியில் நடத்திய சோதனையின் போது கோவையைச் சேர்ந்தவரிடம் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருமலையில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் கோவிலில் உலகளவில் பிரசித்தி பெற்றது. இந்தக் கோவில் வளாகத்தில் துப்பாக்கி போன்ற ஆயுதங்களும், மது அருந்திச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை திருப்பதி மலைப் பாதையில் உள்ள சோதனை சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கோவையைச் சேர்ந்தவரிடம் துப்பாக்கி இருப்பதைப் போலீசார் கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து 9 எம்.எம். ரக துப்பாக்கி மற்றும் 40 குண்டுகளைப் பறிமுதல் செய்தனர். 

பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில், துப்பாக்கி வைத்திருந்தவரின் பெயர் தீபக் மிஸ்ரா, அவர் கோவைபுதூரைச் சேர்ந்தவர் எனக் கண்டுபிடிக்கப்பட்டது. கோவையில் அவர் ரியல் எஸ்டேட் நடத்தி வருவதும், உரிமம் பெற்றே துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, திருப்பதி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் ஒப்படைக்கப்பட்டார். 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தானேவைச் சேர்ந்த ஒருவர் குண்டுகளுடன் கூடிய துப்பாக்கி வைத்திருந்த நபரைப் போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...