கோடை சீசனையொட்டி தேயிலை பூங்காவை பிரபலப்படுத்துமா தோட்டக்கலைத்துறை

நீலகிரி: தொட்டபெட்டா சிகரம் அருகே உள்ள தேயிலை பூங்காவை பிரபலப்படுத்தும் வகையில் கோடை நிகழ்ச்சிகளை நடத்த தோட்டக்கலைத்துறை முன் வருமா என உள்ளூர் மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை எழுந்துள்ளது.

நீலகிரி: தொட்டபெட்டா சிகரம் அருகே உள்ள தேயிலை பூங்காவை பிரபலப்படுத்தும் வகையில் கோடை நிகழ்ச்சிகளை நடத்த தோட்டக்கலைத்துறை முன் வருமா என உள்ளூர் மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை எழுந்துள்ளது.



நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள உதகை அரசு தாவரவியல், ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ்பூங்கா, காட்டேரி பூங்கா ஆகியவை சுற்றுலா பயணிகளின் உள்ளத்தைக் கவர்ந்த சுற்றுலா தலங்களாக மாறியுள்ளது. இந்நிலையில் தோட்டக்கலைத்துறையின ஐந்தாவது பூங்காவாக, தொட்டபெட்டா மலை சிகரம் அருகே 10 ஏக்கர் பரப்பளவில், சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ் ரூ. 79 லட்சம் மதிப்பில் தேயிலை பூங்கா கடந்த 2015-ம் ஆண்டு ஜீன் மாதம் சுற்றுலா பயணிகளுக்காகத் திறக்கப்பட்டது.



இப்பூங்காவில் உள்ள தேயிலை தோட்டங்களின் இடையே நடைப்பயணம் செய்வதன் மூலம், ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள தேயிலையின் வரலாறு குறிப்புகள், மருத்துவ குணங்கள், தேநீர் தயாரிப்பு முறை குறித்த விவரங்கள் தெரிந்து கொள்ள முடியும். மேலும், சிறுவர்கள் விளையாடி மகிழ விளையாட்டு உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. மலர் படுகை, புல்வெளிகளின் மத்தியில் அமைக்கப்பட்டுள்ள பார்வையாளர் மாடத்தில் இருந்து, மலைகள், மரங்கள் சூழ்ந்த பள்ளத்தாக்கு காட்சிகளை கண்டு ரசிக்க முடியும்.



இந்நிலையில், இந்தப் பூங்கா குறித்து சுற்றுலா பயணிகள் இடையே போதிய பிரபலம் இல்லாத நிலை மற்றும் தேயிலைக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கோடை சீசன் சமயங்களில் தேயிலை குறித்த நிகழ்ச்சிகளை நடத்தினால், இந்த தேயிலை பூங்கா பிரபலமாவதுடன், தேயிலை தொழிலையும் மேம்படுத்த முடியும் என்பது உள்ளூர் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும், இந்தப் பூங்காவில் தேயிலை சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்த தோட்டக் கலைத்துறை முன் வருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...