மறு பூஜையுடன் நிறைவடைகிறது பண்ணாரி அம்மன் குண்டம் விழா

ஈரோடு : சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா மறு பூஜையுடன் இன்று நிறைவடைகிறது.

ஈரோடு : சத்தியமங்கலம்  பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா மறு பூஜையுடன் இன்று நிறைவடைகிறது. 

சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது பண்ணாரி அம்மன் கோயில். இந்த கோயிலில் குண்டம் திருவிழா கடந்த மாதம் 19-ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து,  அம்மன் சப்பரம் சுற்றுவட்டார கிராமங்களில் திருவீதி உலா சென்றபின் மார்ச் 27-ம் தேதி கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், கடந்த 3-ம் தேதி அதிகாலை குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த திருவிழாவுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கர்நாடக மாநிலத்திலிருந்தும் ஆயிரக்கணக்கான  பக்தர்கள் வந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர். நேற்று முன் தினம் மாலை தங்கத்தேர் வழிபாடு மற்றும் சுமங்கலி பெண்கள் பங்கற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது. விளக்கு பூஜையில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு பூஜைகள் செய்து அம்மனை வழிபட்டனர். 



குண்டம் விழாவின் நிறைவாக இன்று  மறு பூஜை நடைபெறுகிறது. இதற்கென இன்று  அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. விழாவில் பக்தர்கள் வந்து செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.  மறு பூஜையுடன் குண்டம் திருவிழா நிறைவடைகிறது. 

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...