கோவையில் சங்க தேர்தல் வேட்பாளராக தமிழக ஆளுநரை சேர்த்த கூட்டுறவு கடன் சங்கம்

கோவை : நாளை நடைபெற உள்ள கூட்டுறவு சங்கத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் தமிழக ஆளுநர் பெயரை சேர்த்த காளப்பட்டி கூட்டுறவு கடன் சங்கத்தினரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை : நாளை நடைபெற உள்ள கூட்டுறவு சங்கத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் தமிழக ஆளுநர் பெயரை சேர்த்த காளப்பட்டி கூட்டுறவு கடன் சங்கத்தினரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

காளபட்டி நகர கூட்டுறவு கடன் சங்கத்தின்(கே1691) நிர்வாகிகளுக்கான தேர்தல் நாளை நடைபெற இருக்கிறது. இதில் கூட்டுறவு சங்கத்தில் 11 உறுப்பினர்களுக்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதில் 119 வரிசை எண்ணில் பெயர் இருக்க வேண்டிய இடத்தில் 'ஆளுநர், தமிழ்நாடு அரசு' எனவும், தந்தை பெயர் என்ற இடத்தில், 'கவர்மெண்ட்' என்றும், முகவரியில் 'தமிழ்நாடு' என்றும் அச்சிடப்பட்டிருந்தது.

கோவை முழுவதும் 250-க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் 80 சதவீதமான கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடைபெறாமலே நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 27-க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் வெற்றி பெற பல்வேறு மோசடிகளை ஆளுங்கட்சியினர் செய்து வரும் நிலையில் காளப்பட்டி நகரக் கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பாக நடைபெறும் தேர்தலில் தமிழக ஆளுநரை உறுப்பினராக சேர்த்து விட்டு அவரது தந்தை பெயர் கவர்மெண்ட் என குறிப்பிட்டிருந்தது உறுப்பினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...