கோவையில் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு..!

கோவை: போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவதன் அவசியத்தை வலியுறுத்தி கோவை மாநகர போலீசார் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் இணைந்து மாநகர சிக்னல்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.


கோவை: போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவதன் அவசியத்தை வலியுறுத்தி கோவை மாநகர போலீசார் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் இணைந்து மாநகர சிக்னல்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.



கோவை மாநகர காவல்துறையும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இணைந்து விபத்தில்லா பயணத்தை மேற்கொள்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை அவ்வப்போது நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் மாநகர சிக்னல்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில், சாலை விபத்தினால் ஏற்படும் இன்னல்கள் மற்றும் அதனைத் தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட்டது.



புரூக்பீல்ட் சாலையில், சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சுமார் 2 மணி நேரம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், ஹெல்மெட் அணிந்தவர்களுக்கும், காரில் சீட் பெல்ட் அணிந்தவர்களுக்கும் இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்களைத் தெரிவித்து கௌரவப்படுத்தினர். மேலும், அதிக வெளிச்சத்தை தரும் வாகனங்களின் விளக்குகளுக்கு கருப்பு ஸ்டிக்கர்களை ஒட்டினர்.



இது குறித்து இந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் கோவை மாவட்ட தலைவர் ஜெஃப்ரி ஜோஸ்வா கூறுகையில், "இளைஞர்களாகிய நாங்கள் காவல்துறையுடன் இணைந்து சாலை போக்குவரத்து பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுகளை பொதுமக்களிடையே ஏற்படுத்தி வருகிறோம். நேற்று, புரூக் பாண்ட் சாலை சிக்னலில் வாகன ஓட்டிகளுக்கு சாலை விதிகளின் கட்டாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்.

போக்குவரத்து விதிகளை பொதுமக்களாகிய நாம் பின்பற்றினால் யாருக்கும் எந்த பிரச்சினையும் இருக்காது." என்றார்.

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...