சாலை விபத்தில் புள்ளிமான் உயிரிழப்பு: வாகன ஓட்டிக்கு அபராதம் விதித்த கோவை வனத்துறை

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் அதிவேகமாக வாகனத்தை ஓட்டி புள்ளிமான் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் அதிவேகமாக வாகனத்தை ஓட்டி புள்ளிமான் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலை வனப்பகுதிக்கு நடுவே அமைந்துள்ள சாலை என்பதால் இங்கு புள்ளிமான்கள், காட்டுயானைகள்,மற்றும் பிற வனவிலங்குகள் ஒரு வனத்தை விட்டு மற்ற பகுதிக்கு இடம் பெயரும் போது இந்த சாலையை கடந்துதான் செல்ல வேண்டும். எனவே வாகன ஒட்டிகள் இரவு நேரத்தில் மிக கவனமாக வாகனங்களை இயக்க அறிவுறுத்தபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு 11 மணியளவில் கோத்தகிரி சாலையில் அமைந்துள்ள வனக்கல்லூரி அருகில் சாலையை கடக்க முயன்ற புள்ளிமான் மீது, ஊட்டியிலிருந்து கோவை நோக்கி அதிவேகமாக வந்த கார் மோதியது. இந்த விபத்தில் தூக்கி விசபட்ட புள்ளிமான் சம்பவ இடத்திலேயே இறந்தது.



மேலும், அங்கு நிற்காமல் சென்ற வாகனத்தை ஓடந்துறை வன சோதனைச் சாவடியில் பணியில் இருந்த வனத்துறையினர் சந்தேகத்தின் பேரில் நிறுத்தினர். அப்போது, காரில் அடிபட்டிருப்பது தொடர்பாக சோதனை செய்தனர். விசாரணையில் புள்ளிமான் மீது மோதியது தெரியவந்தது. அதேநேரம் புள்ளிமான் சாலையில் இறந்து கிடக்கும் தகவலும் வன ஆர்வலர் மூலமாக வனத்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டி வந்த கோவையை சேர்ந்த கணேஷ்குமார் என்பவரது மகன் நவநீத் மீது, மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் செல்வராஜ், வன உயிரின குற்ற வழக்கினை பதிவு செய்தார். தொடர்ந்து, மாவட்ட வன அலுவலர் சதீஷ் உத்தரவுப்படி, காரை அஜாக்கிரதையாக ஓட்டி புள்ளிமான் உயிரிழக்க காரணமாக இருந்த நவ்நீத்திற்கு ரூ. பத்தாயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இது போன்ற சம்பவம் நடைபெற்றால் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன், வழக்கு பதிவு செய்து சிறைக்கு செல்ல நேரிடும் என்று நவநீதத்தை வனத்துறை எச்சரித்து அனுப்பினர்.

பின்னர், தேக்கம்பட்டி கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் இறந்த புள்ளிமானை பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்தார்.

தற்போது கோடை காலம் என்பதால் வனவிலங்குகள் நடமாட்டம் கோத்தகிரி மற்றும் குன்னூர் சாலைகளில் அதிகமாக இருப்பதால் இந்த சாலை மார்க்கமாக செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் மித வேகததில் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...