பேமலி பார் சில்ட்ரன்ஸ் அமைப்பை அரசு ஏற்று நடத்தக் கோரி ஊழியர்கள் வலியுறுத்தல்

கோவை: கோவை மாவட்டம் போத்தனூர் பகுதியில் இயங்கி வரும் பேமலி பார் சில்ட்ரன்ஸ் அமைப்பை ஏற்று நடத்துமாறு அரசுக்கு அதன் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் போத்தனூர் பகுதியில் இயங்கி வரும் பேமலி பார் சில்ட்ரன்ஸ் அமைப்பை ஏற்று நடத்துமாறு அரசுக்கு அதன் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

போத்தனூர் - வெள்ளலூர் சாலையில் உள்ள பேமலி பார் சில்ட்ரன்ஸ் என்ற தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அங்கு ஏராளமான கைவிடப்பட்ட குழந்தைகள் மற்றும் மாற்று திறனாளிகள் தங்கியுள்ளனர். இந்நிலையில், அங்கு பணிபுரியும் ஒரு சாரார் இன்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர். 

அதில் கூறியிருப்பதாவது :- தனியார் தொண்டு நிறுவனத்தில் 250-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு அங்கு பணிபுரியும் ஊழியர்கள் பாலியல் தொல்லை கொடுத்து வருகின்றனர். இந்தத் தொண்டு நிறுவனத்திற்கு கனடாவிலிருந்து நிறுவன தலைவர் சாண்ட்ரா சிம்சன் நிதியனுப்பி வருகிறார். ஆனால், குழந்தைகள் மையத்திற்கு வரும் பணத்தை முறைகேடாக ஊழல் செய்கின்றனர். அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு முறையான ஊழியம் வழங்காமல், அதிகளவு பணி சுமை கொடுத்து துன்புறுத்துகின்றனர். மேலும், இந்த தொண்டு நிறுவனத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளனர். 

இது குறித்து அந்த அமைப்பின் பொறுப்பில் உள்ள ஜெகதீஸ்வரி, கலைசெல்வி ஆகியோரை தொடர்பு கொண்டு கேட்டபோது, "அங்கு 68 பேர் பல்வேறு பணிகளில் வேலை செய்து வருகின்றனர். குழந்தைகளைக் கவனிக்க 2 செவிலியர்கள் மற்றும் மருத்துவர் இருக்கின்றனர். கடந்த 2010-ம் ஆண்டு இதேபோல் ஊழியர்கள் குற்றசாட்டு எழுப்பியபோது, பெரும்பாலான ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டில் எந்த முகாந்திரமும் இல்லை," எனத் தெரிவித்தனர்.

Newsletter

சட்டப்பேரவை விதிகள் ஆய்வுக்குழுவில் கனிமொழி சந்தோஷ் MLA நியமனம்

தமிழ்நாடு சட்டப்பேரவையின் சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் MLA தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதலமைச்சர...

கோவை மாநகர BDDS குழுவினர் மாநில அளவிலான Anti-Sabotage Check போட்டியில் மீண்டும் தங்கப் பதக்கம்

சென்னை ஆவடி R.C.-யில் நடைபெறும் தமிழ்நாடு காவல்துறையின் Anti-Sabotage Check Competition 2026-ல் கோவை மாநகர BDDS குழுவைச்...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...