காலியாக உள்ள கால்நடை மருத்துவர் பணியிடம் : விலங்குகளுக்கு சிகிச்சை அளிப்பதில் தொய்வு

நீலகிரி : தெப்பக்காடு யானைகள் முகாமில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கால்நடை மருத்துவர் பணியிடம் காலியாக உள்ளதால் யானைகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நோய்வாய்ப்படும் வன விலங்குகளுக்கு சிகிச்சை அளிப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

நீலகிரி : தெப்பக்காடு யானைகள் முகாமில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கால்நடை மருத்துவர் பணியிடம் காலியாக உள்ளதால் யானைகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நோய்வாய்ப்படும் வன விலங்குகளுக்கு சிகிச்சை அளிப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 



நீலகிரி மாவட்டம் முதுமலையில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் 23 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த யானைகளைப் பராமரிக்க வேண்டி கால்நடை மருத்துவர் பணியிடம் உள்ளது. இந்த பணியிடத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வரை கால்நடை மருத்துவர் விஜயராகவன் பணியாற்றி வந்தார். 



அவர் பணியாற்றிய போது, முகாம் யானைகளை பராமரிப்பது, அவற்றுக்கு சிகிச்சை அளிப்பது, வனப்பகுதியில் இருந்து பிடித்து வரப்படும் காட்டு யானைகளை பராமரிப்பது என்று பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்தார். மேலும், முதுமலை சுற்று வட்டார பகுதிகளில் நோய்வாய்ப்படும் வன விலங்குகளுக்கு சிகிச்சை அளிப்பது, இறந்த வன விலங்குகளை உடற்கூறாய்வு செய்வது போன்ற பணிகளையும் மேற்கொண்டு வந்தார்.

இந்த நிலையில்,அவர் கடந்த மாதம் பணியிட மாறுதல் பெற்று திருப்பூர் சென்றார். அதன் பிறகு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக முதுமலையில் கால்நடை மருத்துவர் பணியிடம் காலியாகவே இருந்து வருகிறது. இதனால் வளர்ப்பு யானைகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நோய்வாய்ப்படும் வன விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்க கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கால்நடை மருத்துவர்கள் அழைத்து வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனால் அவற்றுக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்படுகின்றது. குறிப்பாக, கூடலூரில் உடலில் காயங்களுடன் சுற்றித்திரியும் காட்டு யானைக்கு கால்நடை மருத்துவர் இல்லாததால் சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே, கூடலூரில் காலில் காயங்களுடன் சுற்றித்திரிந்த காட்டு யானைக்கு கால்நடை மருத்துவர் இல்லாத காரணத்தால், 8 நாட்களுக்கு பிறகே அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

எதிர்காலத்தில் இதுபோன்ற முரண்பாடுகளைக் களைய முதுமலை பகுதிக்கு கால்நடை மருத்துவரை விரைந்து பணியமர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...