ஸ்டெர்லைட் ஆலைக்கு தடையில்லா சான்று வழங்க மறுத்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்

தூத்துக்குடி: பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக வந்த புகார்களை அடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு தடையில்லா சான்று வழங்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மறுத்துள்ளது.

தூத்துக்குடி: பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக வந்த புகார்களை அடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு தடையில்லா சான்று வழங்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மறுத்துள்ளது.

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையால் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பல்வேறு உடல் நலப் பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அந்த ஆலையை நிரந்தரமாக தடை செய்யக் கோரி தூத்துக்குடி மாவட்ட மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தடையில்லா சான்றிதழ்

ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சட்டம் 1974-1981-ன் கீழ் தடையில்லா சான்றிதழை மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழங்கியிருந்தது. இந்த தடையில்லா சான்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ந் தேதி புதுப்பித்து வழங்கப்பட்டது. கடந்த மாதம் 31-ம் தேதியுடன் இந்த தடையில்லா சான்றின் காலம் முடிவடைந்தது.

ஆனால், 2 மாதத்திற்கு முன்பாகவே தடையில்லா சான்றை மீண்டும் புதுப்பித்து தர மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடம் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் விண்ணப்பித்திருந்தது. அதே நேரத்தில், ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தை தொடங்கியதால், அனுமதி வழங்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தயங்கியது.

இந்த நிலையில், தூத்துக்குடி சப்-கலெக்டர் பிரசாந்த் ஸ்டெர்லைட் ஆலையிலும், சுற்றியுள்ள கிராமங்களிலும் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அது தொடர்பாக அறிக்கை தயாரித்து அரசுக்கும் அளித்தார். இதற்கிடையே, மார்ச் 29-ந் தேதி திடீரென ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. பராமரிப்பு பணி காரணமாக 15 நாட்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக ஆலை நிர்வாகம் அறிவித்தது.

தடையில்லா சான்றை மாசு கட்டுப்பாட்டு வாரியம் புதுப்பித்து வழங்கினால் மட்டுமே 15 நாட்களுக்குப் பிறகு தாமிர உற்பத்தியை தொடர முடியும் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால், ஸ்டெர்லைட் ஆலைக்கு நிலம் வழங்கப்பட்டது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு சிப்காட் நிர்வாகத்துக்கு மாசுகட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியது.

அதன் தொடர்ச்சியாக, தற்போது ஆலை உரிமத்தைப் புதுப்பித்து தரக்கோரி ஸ்டெர்லைட் நிர்வாகம் வழங்கிய மனுவை மாசுகட்டுபாட்டு வாரியம் ஏற்க மறுத்துள்ளது. மேலும், ஆலையில் தாமிர உற்பத்தி தொடர்பாகவும், அதன் மூலம் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக வந்த புகார்கள் தொடர்பாகவும் கூடுதல் விவரங்களை அளிக்குமாறும் மாசுகட்டுப்பாட்டு வாரியம் கோரியுள்ளது.

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...