தமிழக கர்நாடக எல்லையில் கர்நாடக அரசு பேருந்துகள் நிறுத்தம்

சத்தியமங்கலம் : காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் நீடிக்கும் பதற்றம் காரணமாக கர்நாடகத்தில் இருந்து சத்தியமங்கலம் வழியாக இயக்கப்படும் கர்நாடக அரசு பேருந்துகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

சத்தியமங்கலம் : காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் நீடிக்கும் பதற்றம் காரணமாக கர்நாடகத்தில் இருந்து சத்தியமங்கலம் வழியாக இயக்கப்படும் கர்நாடக அரசு பேருந்துகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. 



 

கர்நாடக மாநிலம் மைசூரு, பெங்களூரு, ஹாசன், சிமோகா ஆகிய பகுதிகளில் இருந்து தினந்தோறும் சத்தியமங்கலம் வழியாக தமிழகத்துக்கு 20 கர்நாடக அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதே போல, தமிழகத்தில் இருந்து 11 பேருந்துகள் கர்நாடகத்துக்கு இயக்கப்படுகின்றன. 

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பதற்றம் நிலவுவதால் கர்நாடகத்தில் இருந்து தமிழகம் செல்லும் அனைத்து பேருந்துகளையும் கர்நாடக அரசு நிறுத்தியுள்ளது. 



இந்நிலையில், சத்தியமங்கலம் அடுத்த புன்செய் புளியம்பட்டி புதுப்பாளையம் பிரிவு என்ற இடத்தில் கர்நாடக அரசு பேருந்தின் முகப்பு கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளதாக பேருந்தின் ஓட்டுநர் சையத் ஜாகீர் அகமது புன்செய் புளியம்பட்டி போலீசில் புகார் அளித்தார். இதன் எதிரொலியாக மைசூரு, சாம்ராஜ்நகர், ஹாசன், பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து வந்த கர்நாடக பேருந்துகள் இரு மாநில எல்லையான புளிஞ்சூர் சோதனைச் சாவடி வரை இயக்கப்பட்டன. அதில் இருந்த தமிழக பயணிகளை சோதனை சாவடியில் இறக்கிவிடப்பட்டனர். தமிழகத்தில் இருந்து கர்நாடக செல்ல அங்கு காத்திருந்த பயணிகளை கர்நாடக பேருந்துகள் ஏற்றிச் சென்றன. 



மேலும், கர்நாடக பதிவெண் கொண்ட சரக்கு வாகனங்கள் தமிழகத்துக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. சில வாகன ஓட்டிகள் கர்நாடக பதிவெண் கொண்ட நெம்பர் பிளேட்டை கழற்றி டி.என் என மாற்றிக் கொண்டு தமிழகம் வந்தனர். தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடக சரக்கு வாகனங்கள் பாதுகாப்பு கருதி ஆசனூர் காவல் நிலைய சோதனைச் சாவடி, திம்பம் மற்றும் பண்ணாரி சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தி மீண்டும் கர்நாடகத்துக்கு போலீசார் திருப்பி அனுப்பினர். சத்தியமங்கலம் போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து கர்நாடக செல்லும் 11 அரசு பேருந்துகள் பாதுகாப்பு கருதி இரு மாநில எல்லையான புளிஞ்சூர் சோதனைச் சாவடி வரை இயக்கப்பட்டது.

Newsletter

சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் MLA நியமனம்

தமிழ்நாடு சட்டப்பேரவையின் சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் MLA தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதலமைச்சர...

கோவை மாநகர BDDS குழுவினர் மாநில அளவிலான Anti-Sabotage Check போட்டியில் மீண்டும் தங்கப் பதக்கம்

சென்னை ஆவடி R.C.-யில் நடைபெறும் தமிழ்நாடு காவல்துறையின் Anti-Sabotage Check Competition 2026-ல் கோவை மாநகர BDDS குழுவைச்...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...