ஜெயலலிதாவின் வாரிசு யார் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் : கோவையில் டி.டி.வி. தினகரன் பேட்டி

கோவை : ஜெயலலிதாவின் வாரிசு யார் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்று கோவையில் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

கோவை : ஜெயலலிதாவின் வாரிசு யார் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்று கோவையில் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

கோவையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே முழுமையான தீர்வு எனவும், இதை வலியுறுத்தி அ.ம.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்றது எனவும் தெரிவித்தார். நாளை பிரதமர் வருகையை கண்டித்து அரசியல் கட்சிகள் நடத்தும் கருப்பு கொடி காட்டும் போராட்டத்தில் தங்கள் கட்சி கலந்து கொள்ளாது எனவும் தெரிவித்தார். அரசியல் கட்சியினர் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக கருப்பு கொடி போராட்டம் நடத்துகின்றனர் எனவும், அது சரியானது தான் எந்ரும் கூறினார். 

சென்னையில் போராடியவர்களிடம் காவல் துறை இவ்வளவு கடினமாக நடந்து கொண்டு இருக்கத் தேவையில்லை என தெரிவித்த அவர் காவல் துறையின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறினார். காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிகளுடன் இணைந்து போராட வேண்டிய தேவை ஏற்பட்டால் கண்டிப்பாக அ.ம.மு.க இணைந்து போராடும் எனவும் தெரிவித்தார். ஜெயலலிதா சிலையை கூட சரியாக வைக்கத் தெரியாதவர் எடப்பாடி பழனிச்சாமி என கூறிய அவர், ஜெயலலிதாவின் தொண்டர்கள் 95 சதவீதம் பேர் எங்களிடம் இருக்கின்றனர் எனவும், யார் ஜெயலலிதாவின் வாரிசு என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்றார். 

மேலும், அம்மா ஆட்சியை அ.ம.மு.க அமைக்கும் என்பதை ஊடகங்கள் மூலமாக எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார். 

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...