உதகையில் கர்நாடக பூங்காவை முற்றுகையிட்ட தமிழ் மாநில காங்கிரசார் கைது

நீலகிரி : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி உதகையில் உள்ள கர்நாடக பூங்காவை முற்றுகையிட்ட தமிழ் மாநில காங்கிரசாரை போலீசார் கைது செய்தனர்.

நீலகிரி : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி உதகையில் உள்ள கர்நாடக பூங்காவை முற்றுகையிட்ட தமிழ் மாநில காங்கிரசாரை போலீசார் கைது செய்தனர். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதன் ஒருபகுதியாக, நீலகிரி மாவட்டம் உதகையில் கர்நாடக மாநிலத்திற்கு சொந்தமான பூங்காவை தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் யுவராஜ் தலைமையில் அக்கட்சியினர் முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடத்தினர்.



அப்போது, உதகையில் உள்ள கர்நாடக பூங்காவை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை மூட வேண்டும், தமிழகத்தில் அமைந்துள்ள இந்தப் பூங்காவில் தமிழர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பைத் தர வேண்டும், கர்நாடக பூங்கா என்ற பெயரை தமிழக அரசு பூங்கா என மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இப்போராட்டத்தில் பங்கேற்ற 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். 

Newsletter

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்...

புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனத்தில் விநாயகருக்கு ராஜ அலங்காரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனம் மற்றும் இரண்டு டன் மலர்களால் ரா...

வரசித்தி விநாயகருக்கு வெள்ளி கவசம் - ரூ.10 லட்சம் நோட்டுகளால் அலங்காரம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெ...