சென்னையில் கைதானவர்களை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100 பேர் கைது

கோவை : சென்னையில் போராட்டம் நடத்திய போது கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வலியுறுத்தி கோவை ஆத்துப்பாலம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.


கோவை : சென்னையில் போராட்டம் நடத்திய போது கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வலியுறுத்தி கோவை ஆத்துப்பாலம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.



பிரதமர் மோடி தமிழகம் வருவதை எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய சீமான், தமீமுன் அன்சாரி உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து மண்டபத்தில் வைத்திருந்தனர். மண்டபத்தில் உள்ளவர்களை விடுவிக்கக்கோரிப் போராடிய அரூண் ரஷீத், நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்ட 18 பேரை போலீசார் கைது செய்து மேடவாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். அவர்களை 25-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

இந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக் கோரி உக்கடம் ஆத்துப்பாலம் பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சி, நாம் தமிழர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது, மாநில அரசுக்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பினர். மேலும், பிரதமர் மோடியின் வருகைக்கு எதிராகப் போராடி, கைதானவர்களை உடனடியாக விடுவிக்காவிட்டால் அனைத்து அமைப்புகளையும் ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தப் போவதாக அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து, அனுமதியின்றி போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...