ஐ.நா. தென்னிந்திய மாதிரி கூட்டமைப்பு மாநாடு இன்று தொடக்கம்

கோவை : 'தி இந்தியன் பப்ளிக் பள்ளி'யில் ஐக்கிய நாடுகள் தென்னிந்திய மாதிரி கூட்டமைப்பை கோவை மாநகர காவல்துறை ஆணையர் கே. பெரியய்யா தொடங்கி வைத்தார்.

கோவை : 'தி இந்தியன் பப்ளிக் பள்ளி'யில் ஐக்கிய நாடுகள் தென்னிந்திய மாதிரி கூட்டமைப்பை கோவை மாநகர காவல்துறை ஆணையர் கே. பெரியய்யா தொடங்கி வைத்தார். 



கோவில்பாளையத்தில் செயல்பட்டு வரும் 'தி இந்தியன் பப்ளிக் பள்ளி'யில் இன்று முதல் 3 நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 600 மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில், உலகப் பொருளாதாரப் பிரச்சனைகளை அலசி ஆராயவும், மாணவர்களுக்கு எதிராக மாணவர்களிடையே நடக்கும் ஆக்கப்பூர்வமான விவாதங்கள், எதிர்கால சமுதாயத்தின் முழுமையான வளர்ச்சிக்கு முன்னோடியாக விளங்க வழிவகை செய்வதற்கேற்ப விளக்கமளிக்கப்படுகிறது. 



இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கோவை மாநகர காவல்துறை ஆணையர் கே. பெரியய்யா பேசுகையில், "இன்றைய இளைய சமுதாயமாகத் திகழும் மாணவர்களின் முயற்சியால், இந்த மாதிரி கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதை நினைத்து நாம் பெருமை கொள்கிறோம். நாட்டின் வருங்கால முன்னோடிகளுக்குள் இப்படி ஒரு எழுச்சிமிகு கூட்டமைப்பை ஏற்பாடு செய்து, அதை இவ்வளவு அழகாக வழி நடத்திச் செல்வதைக் காணும் போது வியப்பாக உள்ளது. மாதிரி கூட்டமைப்பு மாநாட்டின் விவாதங்களின் மூலம் உலக நாடுகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஒரு முன்னோடியாக இருக்கும் என நம்புகிறேன்," என்றார். 

Newsletter

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...