கோவையில் 33-வது அரசு பொருட்காட்சி தொடக்கம்

கோவை: கோவை சிறைச்சாலை காவலர் அணிவகுப்பு மைதானத்தில் 33-வது அரசு பொருட்காட்சியினை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று தொடங்கி வைத்தார்.

கோவை: கோவை சிறைச்சாலை காவலர் அணிவகுப்பு மைதானத்தில் 33-வது அரசு பொருட்காட்சியினை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று தொடங்கி வைத்தார்.

கோவை மாவட்டம், மத்திய சிறைச்சாலை காவலர் அணிவகுப்பு மைதானத்தில் நேற்று செய்தி மக்கள் தொடர்புத் துறையால் நடத்தப்படும் அரசுப் பொருட்காட்சி தொடக்கவிழா மாவட்ட ஆட்சித்தலைவர் த.ந.ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தமிழக சட்டப்பேரவைத் துணை தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஆகியோர் முன்னிலையில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு.கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.



இவ்விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், "முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையிலான அரசு, கோயம்புத்தூர் மாவட்ட மக்களின் நலனை முன்னிட்டு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையினை நிறைவேற்றிடும் வகையில், அத்திக்கடவு-அவினாசி திட்டம், மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவான மெட்ரோ இரயில் திட்டம், ‘ஸ்மார்ட் சிட்டி” திட்டம், லட்சுமி மில்ஸ் முதல் சின்னியம்பாளையம் வரை உயர் மட்ட மேம்பாலம் என பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது.



தமிழக அரசின் திட்டங்களை மக்கள் அனைவரும் அறிந்து கொள்ள அரசுப் பொருட்காட்சி உதவிகரமாக உள்ளது. 45 நாட்கள் நடைபெறும் இந்த பொருட்காட்சியில் கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு நாடகங்களும், நலிந்த கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகளும் நாள்தோறும் நடைபெறவுள்ளன. எனவே மக்கள் அனைவரும் குடும்பத்துடன் வருகை தந்து இந்த பொருட்காட்சியை கண்டுகளித்து அரசின் திட்டங்களையும் சாதனைகளையும் அறிந்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்." என்றார்.



அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசுகையில், "கோவையில் தமிழகத்தின் 192-வதும், கோயம்புத்தூரின் 33-வதுமான அரசுப் பொருட்காட்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் செய்தி மக்கள் தெர்டர்புத் துறையின் மூலம் 10 மாவட்டங்களில் அரசுப் பொருட்காட்சியானது நடைபெறுகின்றது. அதில் அரசுக்கு அதிக வருவாயை ஈட்டித்தருவது கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெறும் பொருட்காட்சியாகும்.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் த.ந.ஹரிஹரன், இயக்குநர் (பொருட்காட்சிகள்) பொ.சங்கர், மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...

Truck Carrying Illegal Gravel Seized on L&T Bypass in Coimbatore

Officials from the Department of Geology and Mining in Coimbatore seized a tipper lorry carrying around three units of g...