சேலம் சுகவனேஸ்வரர் கோயில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி

சேலம்: உடல் நலம் பாதிக்கப்பட்ட சேலம் சுகவனேஸ்வரர் கோயில் யானையை கருணை கொலை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சேலம்: உடல் நலம் பாதிக்கப்பட்ட சேலம் சுகவனேஸ்வரர் கோயில் யானையை கருணை கொலை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் 40 வயது ராஜேஸ்வரி என்ற பெண் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. கோரிமேட்டில் உள்ள மையத்தில், இந்த யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானைக்கு கடந்த மாதம் 5ம்தேதி முதல் காலில் நரம்பு பாதித்ததால் பக்கவாதம் ஏற்பட்டது. இதனால், அன்று முதல் யானை தொடர்ந்து படுத்துக் கொண்டே இருக்கிறது.

இதனையடுத்து யானை நிலைமை மோசமடைந்ததையடுத்து கருணைக்கொலை செய்ய அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் என்பவர் தொடர்ந்தார். மேலும், யானைக்கு இதுவரை அளித்த சிகிச்சை பலனளிக்கவில்லை என்று அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிலையில், இவ்வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்து கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், யானையை கருணை கொலை செய்ய அனுமதி அளித்துள்ளது. மேலும், யானையைப் பரிசோதித்து 48 மணிநேரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு விதிகளுக்கு உட்பட்டே கருணை கொலை செய்யும் நடைமுறைகளைப் பின்பற்றலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

Dengue Cases Declining in Coimbatore, Prevention Measures Intensified: Minister Arunraj

Health Minister K.G. Arunraj said dengue cases in Coimbatore have declined compared to last year, with preventive measur...

முதல்வர் விஜய்யின் பேச்சை கண்டித்து கோவையில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

முதல்வர் விஜய்யின் சட்டப்பேரவை பேச்சைக் கண்டித்து, செப். 12-ம் தேதி ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் செஞ்சிலுவை ச...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 புதிய மாணவர்களுக்கான வரவேற்பு விழா

கோவை ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 27-வது Batch முதலாமாண்டு மாணவர்களுக்கான YUVA 2026 Freshmen...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளர் தினம் கொண்டாட்டம்

துடியலூர் அருகே வட்டமலை பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளர் தினம் சிறப்பாக கடைப்பிடிக்க...

கோவை நீதிமன்ற வளாகத்தில் கைகலப்பு; போலீசார் விசாரணை

கோவை நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வழக்கறிஞரின் காரின் நான்கு டயர்களிலும் காற்றை இறக்கியதாக கூறப்படும் விவகாரத...

கோவை காவல்துறை கான்ஸ்டபிள் மாநில போட்டியில் தங்கத்துக்குப் பின் வெண்கலம் வென்றார்

கோவை நகர காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படையைச் சேர்ந்த காவல் கான்ஸ்டபிள் M. விஜய், செப்டம்பர் 10ஆம் தே...