அனுமதியற்ற வீட்டு மனைகளை வரன்முறை படுத்தும் சிறப்புத் திட்டம்

மேட்டுப்பாளையம்: அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் வாங்கியுள்ள வீட்டு மனைகளை வரன்முறை படுத்த அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குவிந்ததால் பத்திரங்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் திணறினர்.

மேட்டுப்பாளையம்: அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் வாங்கியுள்ள வீட்டு மனைகளை வரன்முறை படுத்த அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குவிந்ததால் பத்திரங்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் திணறினர்.

அரசிடம் முறையாக அனுமதி பெறாத லே-அவுட்களில் தனி வீட்டு மனைகளை வரன்முறை படுத்தும் இரண்டு நாள் சிறப்பு முகாம் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மேட்டுப்பாளையம் நகராட்சி, காரமடை பேரூராட்சி மற்றும் பத்து ஊராட்சிகளில் உள்ள மனைகளை மட்டும் வரன்முறை படுத்தும் பணிகள் நடைபெற்றன. இதில் தங்களது வீட்டு மனைகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கக் கோரி ஏராளமானோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தனர்.

இதனையடுத்து விண்ணப்பதாரரின் இணையதள ஒப்புகை நகல், மனை சான்று, மனை குறித்த வரைபடம், விற்பனை ஆவணம், பட்டா, சிட்டா, வில்லங்க சான்று ஆகியவற்றை இந்த சிறப்பு முகாமில் மாவட்ட அதிகாரி ஒருவர் முன்னிலையில் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகர் மற்றும் ஊராட்சி செயலர்கள் முன்னிலையில் அதிகாரிகள் சரி பார்த்தனர். ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களின் இணைக்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் சரி பார்க்க அதிக நேரமானதால் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் திணறினர்.



தங்களது மனைகளுக்கு அங்கீகாரம் பெற வரன்முறை கட்டணத்தை வங்கியிலும், அபிவிருத்தி கட்டணத்தை அந்தந்த நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி அதிகாரிகளிடம் பொது மக்கள் செலுத்தினர். இதற்காக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சார்பில் சிறப்பு கவுண்டர்கள் ஒன்றிய அலுவலகத்திலேயே திறக்கப்பட்டு பொதுமக்களிடம் பணம் பெற சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. இந்த வகையில் மட்டும் நேற்று ஒரே நாளில் ரூ.99 லட்சம் வரை வசூல் ஆனது.

இந்த இரண்டு நாள் சிறப்பு முகாமில் மக்களின் அனைத்து விண்ணப்பங்களையும் முழுமையாக சரி பார்த்து மனைகளை வரைமுறை படுத்த இயலாத காரணத்தினால், இந்த வரன்முறை படுத்தும் சலுகை திட்டம் வரும் மே மாதம் மூன்றாம் தேதி வரை நீடித்து அந்தந்த பேரூராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி அலுவலகங்களில் தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்...

புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனத்தில் விநாயகருக்கு ராஜ அலங்காரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனம் மற்றும் இரண்டு டன் மலர்களால் ரா...