தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கிய 'டாடா-காபி' நிறுவனம்

வால்பாறை: வால்பாறையில் உள்ள 'டாடா-காபி' நிறுவனம் சார்பில் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி, விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

வால்பாறை: வால்பாறையில் உள்ள 'டாடா-காபி' நிறுவனம் சார்பில் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி, விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள டாடா-காபி நிறுவனத்திற்கு சொந்தமான உருளிக்கல் எஸ்டேட் தேயிலைத் தோட்டங்களில் 1000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக அரசு பள்ளிகளில் பயின்று வரும் 10 மற்றும் 12-ம் வகுப்பில் வால்பாறை தாலுகா அளவில் முதல் மற்றும் இரண்டாவது மதிப்பெண் பெறுபவர்களுக்கு அந்த நிறுவனம் சார்பில் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.



மேலும், விளையாட்டுத் துறையில் மாணவ-மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக ரூ.1.5 ½ லட்சம் மதிப்புள்ள கால்பந்து, காலணி, மற்றும் விளையாட்டு சீருடைகள், கைப்பந்து, கேரம் போர்டு போன்ற விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், மாணவர்கள் தங்கும் விடுதிக்கு 1000 லிட்டர் சோலார் வாட்டர் ஹீட்டர், கிரைண்டர், படுக்கும் மெத்தைகள் மற்றும் இதர பொருட்கள் என மொத்தம் 3 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பில் வழங்கப்பட்டது. பரிசுகளை டாடா காபி குரூப் மேலாளர் விவேக் ஐயனார் வழங்கினார்.



இதுகுறித்து டாடா காபி குரூப் மேலாளர் விவேக் ஐயனார் மாணவ-மாணவிகளிடம் கூறுகையில் “பெற்றோர்கள் தேயிலைத் தோட்டத்தில் மிகுந்த சிரமத்தில் பணியாற்றி உங்களைப் படிக்க வைக்கின்றனர். அவர்களின் கஷ்டங்களை உணர்ந்து நீங்கள் படிப்பில் கவனம் செலுத்தி உயர்ந்த பதவிகளுக்கு செல்ல வேண்டும், என்றார்.



Newsletter

Dengue Cases Declining in Coimbatore, Prevention Measures Intensified: Minister Arunraj

Health Minister K.G. Arunraj said dengue cases in Coimbatore have declined compared to last year, with preventive measur...

முதல்வர் விஜய்யின் பேச்சை கண்டித்து கோவையில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

முதல்வர் விஜய்யின் சட்டப்பேரவை பேச்சைக் கண்டித்து, செப். 12-ம் தேதி ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் செஞ்சிலுவை ச...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 புதிய மாணவர்களுக்கான வரவேற்பு விழா

கோவை ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 27-வது Batch முதலாமாண்டு மாணவர்களுக்கான YUVA 2026 Freshmen...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளர் தினம் கொண்டாட்டம்

துடியலூர் அருகே வட்டமலை பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளர் தினம் சிறப்பாக கடைப்பிடிக்க...

கோவை நீதிமன்ற வளாகத்தில் கைகலப்பு; போலீசார் விசாரணை

கோவை நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வழக்கறிஞரின் காரின் நான்கு டயர்களிலும் காற்றை இறக்கியதாக கூறப்படும் விவகாரத...

கோவை காவல்துறை கான்ஸ்டபிள் மாநில போட்டியில் தங்கத்துக்குப் பின் வெண்கலம் வென்றார்

கோவை நகர காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படையைச் சேர்ந்த காவல் கான்ஸ்டபிள் M. விஜய், செப்டம்பர் 10ஆம் தே...