நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் நலத்துறை கலந்தாய்வு கூட்டம்

நீலகிரி : நீலகிரி மாவட்டம் கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சிறுபான்மையினர் சமுதாய மக்களுடன் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பேராயர் எம்.பிரகாஷ் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சிறுபான்மையினர் சமுதாய மக்களுடன் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பேராயர் எம்.பிரகாஷ் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் தமிழக அரசு சிறுபான்மையின மக்களின் கல்வி, சமூகம் மற்றும் பொருளாதார நிலைகளைப் பெரும்பான்மையினருக்கு நிகராக மேம்பாடு செய்திடும் நோக்கிலும், இப்பிரிவினரின் வாழ்க்கை தரத்தை உயர்த்திட கல்வி ஒரு முக்கியமாக ஊன்று கோலாகும் என்ற அவசியத்தை கருத்திற் கொண்டு சிறுபான்மையினரின் கல்வி மேம்பாட்டிற்கு அதிக அளவில் முனைப்பாக செயல்பட்டு வருகிறது.

சிறுபான்மையின மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திட மாநில அளவில் தனியே சிறுபான்மையினர் நல இயக்ககம் தோற்றுவிக்கப்பட்டும், மாவட்ட அளவில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 1 கண்காணிப்பாளர், 1 இளநிலை உதவியாளர் மற்றும் 1 தட்டச்சர் பணியிடம் தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

மேலும், பிற்படுத்தப்பட்டோர் இனத்தவர்களுக்கான 30 சதவீத இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கென அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் வேலை வாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் சேர்க்கைக்காக 35 சதவீத, தனி இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது. 

இதன்படி 4,06,324 மாணவ, மாணவியருக்கு ரூ.61.95 கோடி வழங்கப்பட்டுள்ளது எனவும் கலந்தாய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் சார்பில் தனி நபர் கடன் திட்டம், கல்வி கடன் திட்டம், கறவை மாடு கடன் உதவி திட்டம், ஆட்டோ கடன் திட்டம், சிறு கடன் திட்டம் என 5 வகை கடன் திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் கூறப்பட்டது.

இதனை தொடர்ந்து இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களிடம் குறைகள், கோரிக்கை மனுக்கள் பெற்றுக் கொள்ளப்பட்டது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் இன்னசென்ட் திவ்யா, மாநில சிறுபான்மையின ஆணையக்குழு உறுப்பினர் அல்ஹாஜ் எஸ்.சையது காமில் சாஹீப் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் சிறுபான்மையினர்  மக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...

Truck Carrying Illegal Gravel Seized on L&T Bypass in Coimbatore

Officials from the Department of Geology and Mining in Coimbatore seized a tipper lorry carrying around three units of g...