கிராமப்புற மாணவர்களின் வாழ்க்கையில் வெளிச்சத்தை ஏற்படுத்தும் ஸ்ரீ பரஞ்சோதி யோகா கல்லூரி

கோவை: வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களுக்கு உடுமலை அருகே உள்ள ஸ்ரீ பரஞ்சோதி யோகா கல்லூரி, இலவச கல்வியை வழங்கி வருகிறது.

கோவை: வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களுக்கு உடுமலை அருகே உள்ள ஸ்ரீ பரஞ்சோதி யோகா கல்லூரி, இலவச கல்வியை வழங்கி வருகிறது. 

உலகளவில் யோகாவினுடைய விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், அனைவரும் யோகாவை அறிவியலாக ஏற்றுக்கொண்டு அதன் பயன்களை உணரத் தொடங்கியதால் கடந்த மூன்றாண்டு காலமாக யோக தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. யோகாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் முயற்சியாக ஸ்ரீ பரஞ்சோதி யோகாக் கல்லூரி நாட்டிலேயே யோகாவுக்கென துவங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உடற்கல்வியில் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் அனுமதியோடு உடுமலை திருமூர்த்தி மலைப் பகுதியில் நடைபெறும் யோகா கல்லூரியில் ஆறு மாத சான்றிதழ் படிப்பு, பட்டயம் மற்றும் பட்டய மேற்படிப்பு, இளங்கலை மற்றும் முதுகலை யோகா முழுநேர படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.



இந்தப் படிப்புகளில் தமிழகம் முழுவதும் உள்ள பகுதிகளில் இருந்து வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள மாணவ, மாணவிகள் 39 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு முற்றிலும் இலவச கல்வி வழங்கி வருகின்றனர். இந்த மாணவ, மாணவிகளுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் யோகா உடைகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டு, சிறந்த யோகா ஆசிரியர்களாக உருவாக்கப்பட்டு வருகிறார்கள். படிக்கும்போதே அருகிலுள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச யோகா பயிற்சியை யோகக் கல்லூரி மாணவ, மாணவிகள் வழங்கி வருகின்றனர். ஒரு வருடத்திற்கு ஏறக்குறைய  60 லட்சத்திற்கும் மேல் செலவு செய்து இலவச கல்வியை வழங்கி வருகின்றனர். இந்த ஆண்டில் புதிதாக சேரும் மாணவர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே இருந்தால் அவர்களுக்கும் இலவச கல்வி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"வறுமை ஒரு தடையல்ல. கற்பதற்கு ஆர்வமும், விடாமுயற்சி மற்றும் நம்பிக்கையும் இருந்தால் போதும். நாமும் இந்த சமுதாயத்தில் சாதனையாளராக மட்டுமல்ல, அனைவரையும் நேசிக்கக்கூடிய மனிநேயமிக்கவராக வர முடியும்," என்கிறார் பரஞ்சோதி யோகக் கல்லூரியின் தாளாளர் செங்குட்டுவன். 

யோக ஆரோக்கியமான வாழ்விற்கு மட்டுமல்ல, சந்தோஷமான, அமைதியான மற்றும் சமாதானமான வாழ்க்கைக்கு உதவும் இயற்கையைப்போல என்பதை நிதர்சனமாக்கி வருவது அனைவருக்கும் பெருமையே.

Newsletter

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...

Truck Carrying Illegal Gravel Seized on L&T Bypass in Coimbatore

Officials from the Department of Geology and Mining in Coimbatore seized a tipper lorry carrying around three units of g...