திருப்பூரில் கிணற்றில் குளிக்கச் சென்ற இரு பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி பலி

திருப்பூர்: திருப்பூரில் கிணற்றில் குளிக்கச் சென்ற இரண்டு பள்ளி மாணவர்கள், நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருப்பூர்: திருப்பூரில் கிணற்றில் குளிக்கச் சென்ற இரண்டு பள்ளி மாணவர்கள், நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 



திருப்பூர் - பலவஞ்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் மகாஷ், மாதேஷ். இருவரும் அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தனர். இந்நிலையில் இருவரும் வீரபாண்டி பகுதியிலுள்ள கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, நீரில் இறங்கிய அவர்கள், கிணற்றின் ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளனர். இதனால், நீச்சல் தெரியாத அவர்கள் நீரில் மூழ்கியுள்ளனர். இவர்களது சத்தம் கேட்ட அருகிலிருந்தவர்கள் வீரபாண்டி காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பூர் தெற்கு தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

பின்னர், சுமார் 2 மணி நேரத் தேடுதலுக்கு பிறகு இரு மாணவர்களும் சடலமாக மீட்கப்பட்டனர். மாணவர்களின் உடல்களைப் பார்த்த பெற்றோர்கள் கண்ணீர் விட்டு கதறியழுதனர். தொடர்ந்து, இரு மாணவர்களின் உடல்களும் அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. குளிக்கச் சென்ற மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...

Truck Carrying Illegal Gravel Seized on L&T Bypass in Coimbatore

Officials from the Department of Geology and Mining in Coimbatore seized a tipper lorry carrying around three units of g...