கோவையில் காவடி போட்டியில் அசத்திய பள்ளி மாணவர்கள்

கோவை: பாரம்பரிய கலையை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட அளவிலான காவடி போட்டிகள் கோவை அருகே நடைபெற்றது.

கோவை: பாரம்பரிய கலையை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட அளவிலான காவடி போட்டிகள் கோவை அருகே நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை மற்றும் சங்கமம் கலைக் குழு சார்பில் மாவட்ட அளவிலான காவடி போட்டிகள் கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில், காவடியை தலையில் வைத்து ஆடுதல், மயிலாட்டம், கண்ணில் பணம் எடுத்தல், குளிர்பானம் அருந்துதல் போன்ற 10-க்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

12 குழுக்களைச் சேர்ந்த சார்ந்த 400 பேர் இந்தப் போட்டியில் கலந்துகொண்டனர். மூன்று வயது சிறுவர் முதல் 60 வயதுள்ளவர்கள் வரை இந்த போட்டியில் கலந்து கொண்டனர்.

சிறுவர்கள் தோலில் காவடியை சுமந்துகொண்டு சர்வ சாதாரணமாக ஆடியதும், ஏணியின் மீது ஏறி காவடி ஆடியதும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதனைத் தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற அணிகளுக்கு கோப்பைகள், நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இது குறித்து சங்கமம் கலைக்குழு ஆசிரியர் கனகராஜ் கூறுகையில், "அழிந்து வரும் நாட்டுப்புற கலைகளை பாதுகாக்க கருமத்தம்பட்டி பகுதியில் காவடி ஆட்டத்தை அனைத்துத் தரப்பு மக்களிடையே கொண்டு செல்லும் முயற்சி மேற்கொண்டு வருகிறோம். ஒயிலாட்டம், கும்மி ஆட்டம் ஆகியவை இந்தப் பகுதியில் பிரபலமாகி வருகிறது. ஏராளமானோர் இதைக் கற்று கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த கலைகளை கற்றுக் கொள்வதில் சிறுவர்கள் முதல் 60 வயதுள்ள பெண்கள் மற்றும் ஆண்கள் அதிக ஆர்வம் காட்டுவதால், பாரம்பரிய கலைகளை மீண்டும் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்." என்றார்.

Newsletter

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்...

புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனத்தில் விநாயகருக்கு ராஜ அலங்காரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனம் மற்றும் இரண்டு டன் மலர்களால் ரா...

வரசித்தி விநாயகருக்கு வெள்ளி கவசம் - ரூ.10 லட்சம் நோட்டுகளால் அலங்காரம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெ...