கால்நடைகளுக்காக நவீன ஆம்புலன்ஸ் திட்டம் விரைவில் தொடங்கப்படும் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

திருப்பூர்: கால்நடைகள் இருக்கும் இடத்திலேயே சென்று சிகிச்சை அளிக்கும் வகையில் லிப்ட் வசதியுடன் கூடிய அம்மா மெடிக்கல் ஆம்புலன்ஸ் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று தமிழக கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்: கால்நடைகள் இருக்கும் இடத்திலேயே சென்று சிகிச்சை அளிக்கும் வகையில் லிப்ட் வசதியுடன் கூடிய அம்மா மெடிக்கல் ஆம்புலன்ஸ் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று தமிழக கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.



திருப்பூர் மாவட்ட வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு சமூக நலத்துறை மற்றும் வருவாய்த் துறையின் சார்பாக தாலிக்கு தங்கம் வழங்குதல், மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை வழங்குதல், மின்னணு குடும்ப அட்டைகள்  மற்றும் பட்டா மாறுதல் என 385 பயனாளிகளுக்கு ரூ.73,74,790 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சேலம் சுகவனேஸ்வரர் கோவில் யானை வயது முதிர்ந்து தான் இறந்தது. அடுத்த இரண்டு மாதங்களில்  அனைத்து கால்நடைகள் பயன்பெறும் வகையில் லிப்டு வசதியுடன் புதிதாக இலவச அம்மா மெடிக்கல் ஆம்புலன்ஸ் வசதியை தமிழக முதல்வர் தொடங்கி வைப்பார். மருத்துவ குழுவுடன் கால்நடைகள் இருக்கும் இடத்திற்கே சென்று சிகிச்சை அளிக்கப்படும். தமிழகத்தில் காவல் துறையினர் தாக்கப்பட்டால் தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...