ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை : ஈரோட்டில் பா.ஜ.க பிரமுகர் கைது

ஈரோடு : ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பா.ஜ.க வழக்கறிஞரை ஈரோடு ரயில்வே போலிசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

ஈரோடு : ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பா.ஜ.க வழக்கறிஞரை ஈரோடு ரயில்வே போலிசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

சென்னை புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கைலேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) . இவர் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் குடும்பத்தினருடன் கேரளா மாநிலம் வர்தாவில் இருந்து சென்னை செல்வதற்காக சென்னை திருவனந்தபுரம் விரைவு ரயிலில் பயணித்துள்ளார்.



அப்போது, இவர்களுடன் வந்த 9 வயது சிறுமிக்கு அதே பெட்டியில் பயணித்த நபர் ஒருவர் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதனையறிந்த உறவினர்கள் ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து ஈரோடு ரயில் நிலையத்திற்கு ரயில் வந்தவுடன் அங்கு தயாராக இருந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அந்த நபர் சென்னை பெசன்ட்நகரை சேர்ந்த வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் என்பதும் சிறுமியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டம் 2012-ன் கீழ் வழக்கறிஞரைக் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இவர் கடந்த 2006-ம் ஆண்டில் நடைபெற்ற தமிழக சட்டமன்ற பொது தேர்தலில் சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் பா.ஜ.க சார்பாக போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...

Truck Carrying Illegal Gravel Seized on L&T Bypass in Coimbatore

Officials from the Department of Geology and Mining in Coimbatore seized a tipper lorry carrying around three units of g...