கோவை ஆட்சியர் அலுவலக பாதுகாப்பு பணியில் தீயணைப்புத் துறையினர்: தற்கொலை முயற்சிகளை தடுக்க தீவிரம்

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு நீதி நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவும் யாரேனும் தற்கொலை முயற்சி செய்தால் அதனைத் தடுக்கவும் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் தீவிர முன் எச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு நீதி நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவும் யாரேனும் தற்கொலை முயற்சி செய்தால் அதனைத் தடுக்கவும் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் தீவிர முன் எச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கந்து வட்டி புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி குடும்பத்துடன் 4 பேர் உடலில் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

அதன் பின்பு அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு நீதி நாளன்று பொதுமக்கள் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.



இது குறித்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஆட்சியர் அலுவலக வளாகத்தின் முன்புறம் 15 காவலர்களும், வளாகத்தினுள் 10-க்கும் மேற்பட்ட காவலர்களும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வாரம் தோறும் திங்கள்கிழமைகளில் உதவி ஆணையர் தலைமையில் இந்த குழு இயங்கும்." என்றார்.



இதனிடையே, பாதுகாப்புகளையும் மீறி யாரேனும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டால் அவர்களை மீட்க இரு தீயணைப்பு வீரர்களும் காப்பாற்ற தேவையான உபகரணங்களும் தயார் நிலையில் தீயணைப்பு துறையினர் வைத்துள்ளனர்.

இது குறித்து கோவை மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி பி.பிரதிப்குமார் கூறுகையில், "பணியில் இரண்டு தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒருவேளை யாரேனும் தீ பற்றவைத்துவிட்டால் அதனை அணைக்க தீ அணைப்பான் தயார் நிலையில் உள்ளது. மேலும், தண்ணீருடன் 2 வாளிகளும், கயிறுகளும், போர்வைகளும் உள்ளன." என்றார்.

இந்த முன் எச்சரிக்கை நடவடிக்கைக்கு பொதுமக்களிடையே பாராட்டுகள் கிடைத்தாலும் இது அனைத்து நாட்களிலும் செயல்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...