செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவரான தவசி, பெண் காவல் ஆய்வாளரை அரிவாளால் தாக்கியதைத் தொடர்ந்து, தற்காப்புக்காக அவரது காலில் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
கோவை:. செப். 12-ஆம் தேதி கோவை மாநகர தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், 14 வயது சிறுமி இருசக்கர வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சந்தோஷ் (24) மற்றும் தவசி (28) ஆகிய இருவர் சிறுமியை கடத்திச் சென்று, கஞ்சிக்கோணாம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து, தலைமறைவாக இருந்த இருவரையும் போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ஆயுதத்தை மீட்க சென்றபோது தாக்குதல்
வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, சிறுமியை மிரட்ட பயன்படுத்தியதாக கூறப்படும் அரிவாளை மறைத்து வைத்திருந்த இடத்தை காட்டுவதற்காக தவசியை, தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுவர்ணவள்ளி தலைமையிலான போலீசார் அழைத்துச் சென்றனர்.
அப்போது, மறைத்து வைக்கப்பட்டிருந்த அரிவாளை திடீரென எடுத்த தவசி, காவல் ஆய்வாளர் சுவர்ணவள்ளியை தாக்கியதாக போலீசார் தெரிவித்தனர். இதில் ஆய்வாளரின் கையில் காயம் ஏற்பட்டது.
பின்னர், அங்கிருந்த போலீசாரையும் அரிவாளால் தாக்க தவசி முயன்றதாக கூறப்படுகிறது. பலமுறை எச்சரித்தும் அவர் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டதால், பாதுகாப்புப் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் சிலம்பரசன் தற்காப்பு நடவடிக்கையாக தவசியின் இடது காலில் துப்பாக்கியால் சுட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த தவசிக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
அரிவாள் தாக்குதலில் காயமடைந்த காவல் ஆய்வாளர் சுவர்ணவள்ளியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கைது செய்யப்பட்ட சந்தோஷ் மற்றும் தவசி மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சந்தோஷ் (24) மற்றும் தவசி (28) ஆகிய இருவர் சிறுமியை கடத்திச் சென்று, கஞ்சிக்கோணாம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து, தலைமறைவாக இருந்த இருவரையும் போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ஆயுதத்தை மீட்க சென்றபோது தாக்குதல்
வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, சிறுமியை மிரட்ட பயன்படுத்தியதாக கூறப்படும் அரிவாளை மறைத்து வைத்திருந்த இடத்தை காட்டுவதற்காக தவசியை, தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுவர்ணவள்ளி தலைமையிலான போலீசார் அழைத்துச் சென்றனர்.
அப்போது, மறைத்து வைக்கப்பட்டிருந்த அரிவாளை திடீரென எடுத்த தவசி, காவல் ஆய்வாளர் சுவர்ணவள்ளியை தாக்கியதாக போலீசார் தெரிவித்தனர். இதில் ஆய்வாளரின் கையில் காயம் ஏற்பட்டது.
பின்னர், அங்கிருந்த போலீசாரையும் அரிவாளால் தாக்க தவசி முயன்றதாக கூறப்படுகிறது. பலமுறை எச்சரித்தும் அவர் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டதால், பாதுகாப்புப் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் சிலம்பரசன் தற்காப்பு நடவடிக்கையாக தவசியின் இடது காலில் துப்பாக்கியால் சுட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த தவசிக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
அரிவாள் தாக்குதலில் காயமடைந்த காவல் ஆய்வாளர் சுவர்ணவள்ளியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கைது செய்யப்பட்ட சந்தோஷ் மற்றும் தவசி மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.