விவசாயி மீது தாக்குதல்: அதிகாரி மீது நடவடிக்கை கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் விவசாயி-யை தாக்கிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் விவசாயி-யை தாக்கிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

ஆர்.எஸ்.புரம் பகுதியில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் விவசாயிகள் அல்லாதவர்களை வைத்து அதிகாரிகள் லாபம் பார்ப்பதாக புகார்கள் எழுந்துள்ளது.

இதைத் தொடர்ந்து, சந்தை அதிகாரிகள் பல்வேறு வியாபாரிகளைக் கொண்டு லாபம் பார்ப்பதைக் கண்டித்து வெளியே கூறிய விவசாயியை சந்தை அதிகாரிகள் தாக்கியதாக தெரிகிறது.

இந்த நிலையில், விவசாயியைத் தாக்கிய அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இது குறித்து விவசாயிகள் கூறுகையில், "தாக்கப்பட்ட விவசாயி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதிகாரிகள் விவசாயி மீது நடத்திய தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். உழவர் சந்தைகளில் கடைகளை அமைக்க விடமாட்டோம் என்று அதிகாரிகள் மிரட்டுகின்றனர். பல அதிகாரிகள் சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் சூழலில் ஒரு சிலரின் தவறான செயல்பாடுகளால் விவசாயிகள் மொத்தமாக பாதிக்கப்படுகின்றனர்." என்றார்.



Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...