நில அளவேடு, பதிவேடு துறையின் 160-வது தின கண்காட்சி தொடக்கம்

கோவை: கோவையில் நில அளவேடு, பதிவேடு துறையின் 160-வது தின கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் இன்று தொடங்கி வைத்தார்.

கோவை: கோவையில் நில அளவேடு, பதிவேடு துறையின் 160-வது தின கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் இன்று தொடங்கி வைத்தார்.

அரசு துறைகளில் பழமையான துறையாகக் கருதப்படும் நிலஅளவை பதிவேடு துறை கடந்த 1858-ம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. இந்தாண்டோடு, இத்துறை 160 ஆண்டுகளை கடந்துள்ளதை குறிக்கும் வகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன், வருவாய் அலுவலர் ரவிசந்தரன் ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.



நிலஅளவை துறையின் பிதாமகன் என போற்றப்படும் வில்லியம் லாம்டன், 1802-ம் ஆண்டு சென்னையில் புனித தோமையர் மலையில் நில அளவையைத் துவங்கிய நாளான ஏப்ரல் 10-ம் நாள் தேசிய நில அளவை தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதன் புகைபடங்கள் தற்போது உபயோகப்படுத்தும் முறை உள்ளிட்ட படங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது.



அன்றைய சென்னை மாகாணத்தை உள்ளடக்கி இருந்த ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களை தலைமையிடமாகக் கொண்டு 1858-ம் ஆண்டு 18 நில அளவர்கள், 20 வரைவாளர்கள், 30 நிலஅளவை உதவியாளர்கள், 50 எழுத்தாளர்கள் கொண்டு துவங்கப்பட்ட நில அளவைத் துறை 160 ஆண்டுகளைக் கடந்துள்ளது. நில அளவைத் துறையின் ஆவணங்களை, தற்போது இணையதளம் மூலம் உலகில் எங்கிருந்து வேண்டுமானாலும் பார்க்கும் அளவிற்கு அறிவியல் தொழில்நுட்பம் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...