பாலியல் பலாத்கார வழக்கில் ஆசாராம் பாபு குற்றவாளி: ஜோத்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபு உள்ளிட்ட 5 பேர் குற்றவாளிகள் என ஜோத்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபு உள்ளிட்ட 5 பேர் குற்றவாளிகள் என ஜோத்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

16 வயது சிறுமி உள்ளிட்ட பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக சாமியார் ஆசாராம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக 2013-ம் ஆண்டு முதல் அவர் சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில், இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சாமியார் ஆசாராம் பாபுவை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால், அவர் அடைக்கப்பட்டுள்ள ஜோத்பூர் சிறைக்கே சென்று நீதிபதி மதுசூதனன் தீர்ப்பு வழங்கினார்.

அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவரை குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்தார். இன்று மாலைக்குள் முழு தண்டனை விபரம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசாராமிற்கு 10 ஆண்டு வரை சிறை தண்டனை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. அதே சமயம், சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை வழங்கும் அவசர சட்டத்தை சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ளதால், ஆசாராமிற்கு 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆசாராம் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதால் ராஜஸ்தான், அரியானா, உத்தரபிரதேசம், குஜராத், பஞ்சாப், மத்திய பிரதேசத், பஞ்சாப் உள்ளிட்ட 8 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆசாராமின் ஆசிரமங்களுக்கும், அவரால் பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. முக்கியமாக, ஜோத்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆசாராமிற்கு அதிகபட்சம் தண்டனை வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பில் வாதிடப்பட்டு வருகிறது. அதேசமயம், ஆசாராமின் வயதைக் கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என ஆசாராம் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை வைத்துள்ளார். ஆசாராம் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதை பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர், சமூர் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் வரவேற்றுள்ளனர். ஆனால், ஆசாராமிற்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை அறிந்து அவரது ஆதரவாளர்கள் கண்ணீர் விட்டுக் கதறி அழுது வருகின்றனர். முன்னதாக, இன்று வழங்கப்படும் தீர்ப்பு ஆசாராமிற்கு சாதகமாக வர வேண்டும் என ஆமதாபாத் உள்பட பல இடங்களில் உள்ள அவரது ஆசிரமங்களில், ஆதரவாளர்கள் பலர் சிறப்பு வழிபாடு நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...

Truck Carrying Illegal Gravel Seized on L&T Bypass in Coimbatore

Officials from the Department of Geology and Mining in Coimbatore seized a tipper lorry carrying around three units of g...