ஜல்லிக்கட்டு வன்முறை சம்பவம்: கோவையில் இறுதிகட்ட விசாரணை தொடக்கம்

கோவை: ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது கோவையில் நடைபெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாக ஐந்தாம் கட்ட விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் இன்று தொடங்கினார்.


கோவை: ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது கோவையில் நடைபெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாக ஐந்தாம் கட்ட விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் இன்று தொடங்கினார்.

தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது சட்டம் ஒழுங்கு முழுமையாக பாதிக்கப்பட்டது. அமைதியான முறையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தியதே இந்த பிரச்சினைக்கு காரணம் என்று ஒரு சாரர் குற்றம்சாட்டினர். இளைஞர்கள் போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்ததே வன்முறைக்குக் காரணம் என்று சிலர் குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு யார் காரணம்? என்று விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு கோவையில் பொதுமக்கள் மற்றும் போலீசாரிடம் நான்கு முறை விசாரணை நடத்தியுள்ளது.

தொடர்ந்து, இறுதி விசாரணையான ஐந்தாம் கட்ட விசாரணையை நடத்த விசாரணைக் குழு இன்று கோவை வந்துள்ளது. இதுகுறித்து விசாரணைக் குழு ஆணையர் ராஜேஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இன்று முதல் மூன்று நாட்கள் நடக்கும் இறுதி விசாரணையில் கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் லட்சுமி உட்பட 6 காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடைபெறுகிறது. சம்மன் கொடுத்து விசாரணைக்கு வராதவர்களை நாங்கள் வற்புறுத்துவதில்லை. ஜல்லிக்கட்டு தொடர்பான விசாரணையில் கோவையில் பாதிக்குப் பாதி பேர் காவல்துறைக்கு ஆதரவாகவும், எதிராகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர். அடுத்து மதுரையிலும், சென்னையிலும் விசாரணை தொடரும். பத்திரிக்கையாளர்களிடம் நடந்த விசாரணையில் அவர்கள் ஆதாரங்களையும், புகைப்படங்களையும் கொடுத்துள்ளனர். மேலும் மதுரையில் 800-க்கு மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றது. அதில் அலங்கநால்லூரில் போராடியவர்கள் போலீசாருக்கு ஆதரவாகத்தான் வாக்குமூலம் அளித்துள்ளனர்." என்றார்.

Newsletter

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்...

புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனத்தில் விநாயகருக்கு ராஜ அலங்காரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனம் மற்றும் இரண்டு டன் மலர்களால் ரா...