கோவை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் சதம் விளாசிய வெயில்

கோவை : கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.


கோவை : கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

கோடை காலம் தொடங்கிய முதலே கோவையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வெளியே தலை காட்ட முடியாத அளவிற்கு வெப்பத்தின் அளவு கோர தாண்டவம் போடுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு வெயிலின் அளவு 100 டிகிரி பாரன்ஹீட்டாக இருக்கும் என ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், மதுரை, சிவகங்கை, தேனி, தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, வேலூர் மற்றும் விருதுநகரில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. திருப்பூரில் அதிகபட்சமாக 102 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர்செல்வம் கூறுகையில், "கோவையில் 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை வரை வானம் வறண்ட நிலையில் காணப்படும். காலை நேரங்களில் 38.5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது. அதேசமயம், இரவு நேரங்களில் 25 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகக்கூடும். 

திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களிலும் வறண்ட வானமே காணப்படும். திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்கனவே 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகிவிட்டது. கோவையைப் பொறுத்தவரையில் காற்றின் வேகம் 10-ல் இருந்து 12 கிலோ மீட்டர் வரை வீச வாய்ப்புள்ளது," என்றார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...