15 வருடங்களாக தெருவிளக்கு வசதியின்றி தவிக்கும் பொதுமக்கள் : நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

திருப்பூர்: திருப்பூரில் 15 வருடங்களுக்கும் மேலாக தெருவிளக்கு வசதியின்றி தவித்து வருவதால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர்: திருப்பூரில் 15 வருடங்களுக்கும் மேலாக தெருவிளக்கு வசதியின்றி தவித்து வருவதால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சி 36-வது வார்டுக்குட்பட்ட பி.ஏ.பி. நகர், கார்த்திக் நகர் பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 1000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், சுமார் 15 வருடங்களுக்கு மேலாக தெருவிளக்கு வசதியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலைப் பயன்படுத்தி சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்கள் அவ்வழியாக வரும் பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுப்பதாகவும் புகார் கூறப்படுகிறது.



இரவு நேரங்களில் தெருவிளக்கு இல்லாததால் வெளியில் வரக் கூட பயமாக இருப்பதாகவும், பள்ளிக் குழந்தைகள் இரவு நேரங்களில் டியூசன் சென்று வரும் போது தனியாக வருவதற்கு பயமாக இருப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், இப்பகுதிக்கு இதுவரை சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதியைப் பயன்படுத்தி எந்தப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஆகையால், மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து உடனடியாக தெருவிளக்குகளை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்...

புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனத்தில் விநாயகருக்கு ராஜ அலங்காரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனம் மற்றும் இரண்டு டன் மலர்களால் ரா...