மாயார் ஆற்றில் தடுப்பணை கட்ட வலியுறுத்தி நீலகிரி ஆட்சியரிடம் அய்யாக்கண்ணு மனு

நீலகிரி : மாயார் ஆற்றில் தடுப்பணை கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறித்தி நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு மனு அளித்தார்.

நீலகிரி : மாயார் ஆற்றில் தடுப்பணை கட்ட  தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறித்தி நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு மனு அளித்தார்.



காவிரி  மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தேசிய, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களையும்  சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு அளித்து வருகின்றனர். இந்நிலையில், அவர்கள்  நீலகிரி மாவட்டம் உதகையில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை சந்தித்து மனு  அளித்தனர். 

பின்னர் செய்தியாளர்களிடம்  மாநில தலைவர் அய்யாக்கண்ணு  பேசுகையில், "சிரப்பூஞ்சியை விட ஆண்டுக்கு அதிக மழை பெய்ய கூடிய இடம் நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த தேவலா பகுதியாகும்.  இங்கு, உற்பத்தியாகும் மழை நீர் பாண்டியாறு, புன்னம்பழா ஆற்றின் வழியாக கேரளா மற்றும் கர்நாடாகவிற்கு சென்று வீணாகக்  கடலில் கலக்கிறது. எனவே, மாயார் ஆற்றில் தடுப்பணை கட்டி தமிழகத்திற்கு திருப்பினால் பவானி பாசன விவசாயிகள் பயன்டைவார்கள்.  ஆண்டுக்கு 5 ஆயிரம் டி.எம்.சி தண்ணீர்  தமிழ்நாட்டிற்க்கு கிடைக்கும். 

மேலும், கார்ப்பரேட் கம்பெனிகள் இலாபம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் உணவு பொருட்களை மக்கள் உண்பதால் 50 சதவீதம் பேர் ஆண்மை இழக்கவும், பெண்கள் கருத்தரிக்கும் சக்தியை இழக்க செய்யவும் வாய்ப்புள்ளது. இந்த நிலை ஏற்படாமல் இருக்க மத்திய அரசு அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்வதுடன், ஆறுகளில் தடுப்பணைகள் கட்டியும், ஏரி, குளம், கண்மாய்களை தூர்வாரியும் சீமை கருவேல மரங்களை அகற்றியும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மேலும், மத்திய அரசு நதிகளை தேசிய மயமாக்கி அரபிக்கடலிலும், வங்காள விரிகுடாவிலும் வீணாகக்  கடலில் கலக்கும் தண்ணீரை தென்னகத்திற்கு, குறிப்பாக தமிழகத்திற்கு திருப்பி விட வேண்டும்," என்றார்.

Newsletter

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்...

புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனத்தில் விநாயகருக்கு ராஜ அலங்காரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனம் மற்றும் இரண்டு டன் மலர்களால் ரா...