மேட்டுப்பாளையம் அருகே லாரி கவிழ்ந்த விபத்தில் 8 பேர் படுகாயம்

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, பாறையின் மீது மோதிய விபத்தில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, பாறையின் மீது மோதிய விபத்தில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

மேட்டுப்பாளையத்தை அடுத்த வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சுமார் 18 பேர் நீலகிரி மாவட்டம் எம்ரால்டு பகுதியில் உள்ள ஒரு கோவில் விஷேச நிகழ்ச்சியில் இசை மேளம் வாசிக்க குழுவாக லாரியில் சென்றுள்ளனர். அத்திகடவு அருகே உள்ள சொரண்டி மேடு என்ற இடத்தில் லாரி சென்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டினை இழந்த லாரி சாலையின் ஓரத்தில் இருந்த பாறையின் மீது மோதி கவிழ்ந்து விபத்துகுள்ளானது. இதில், அந்த லாரியில் பயணித்த சுமார் 8 பேர் படுகாயமடைந்தனர். மேலும், 10 பேர் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த அப்பகுதி கிராம மக்கள் மற்றும் போலீசார், படுகாயமடைந்த பாலசுப்ரமணி, மகேஷ், நாகராஜ், சுரேஷ் உள்பட 8 பேரை மீட்டு ஆம்புலனஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், விபத்து குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...