பயணச்சீட்டுப் பரிசோகர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கி கௌரவிப்பு

பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்பவர்களுக்கு எதிராக எடுத்து வரும் கடும் நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்ட பயணச்சீட்டுப் பரிசோகர்களுக்கு தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சார்பில் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்பவர்களுக்கு எதிராக எடுத்து வரும் கடும் நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்ட பயணச்சீட்டுப் பரிசோகர்களுக்கு தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சார்பில் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

இது குறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதுடன், அனைத்து ரயில்களிலும், ரயில்நிலையங்களிலும், அடிக்கடி பயணச்சீட்டு பரிசோதனைகள் நடத்தி வருகிறது. கடந்த (2017-18) ஆண்டில், சேலம் கோட்ட முதுநிலை வணிகமேலாளர் ஏ. விஜுவின், சேலம் கோட்ட வணிக மேலாளர் கே. மாது இருவரது மேற்பார்வையில், பயணச்சீட்டு பரிசோதகர்கள் குழு 38,205 பரிசோதனைகள் நடத்தி, 2,11,712 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ. 8,95,52,095/- அபராதம் மற்றும் பயணச்சீட்டு தொகையாக வசூலித்துள்ளது. இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட 4 சதவீதம் அதிகமாகும். 

ஏப்ரல் 2017 முதல் மார்ச் 2018 வரை பயணச்சீட்டு இல்லாத பயணம் செய்தோர் எண்ணிக்கை (Nos.) 46,662. அபராதம் மற்றும் பயணச்சீட்டு தொகை: ரூ. 1,91,33,011.00 வசூலிக்கப்பட்டுள்ளது.

சரியான பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தோர் எண்ணிக்கை (Nos.) 1,57,852 (குறைந்த வகுப்பு பயணச்சீட்டு வைத்துக் கொண்டு, உயர் வகுப்பில் பயணிப்பது, பயணச்சீட்டில் உள்ள ரயில்நிலையத்தை விட வேறு ரயில்நிலையங்களுக்குப் பயணிப்பது போன்றவை) அபராதம் மற்றும் பயணச்சீட்டு தொகை: ரூ .6,74,53,829. முன்பதிவு செய்யாமல் சுமைகளை எடுத்துச் சென்று அல்லது அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான சுமைகளை எடுத்துச் சென்றவர்கள் எண்ணிக்கை (Nos.) 7,198, அபராதம் மற்றும் பயணச்சீட்டு தொகை: ரூ. 29,65,255 ஆகும். 

இவ்வாறு சிறப்பாக பணியாற்றிய சேலம் கோட்ட பயணச்சீட்டு பரிசோதகர்கள் ஆர், சந்திரசேகரன், பி.எஸ்.பத்மகுமார், பி. செல்வகுமார், ஆர், சந்திரன், எஸ். பாரதி ஆகியோருக்கு சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் யு. சுப்பாராவ் ஒவ்வொருவருக்கும், பாராட்டுச் சான்றிதழுடன், ரூ. 1000 ரொக்கப்பரிசையும் வழங்கினார்," என கூறப்பட்டுள்ளது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...