நெடுஞ்சாலைக்கு எதிர்ப்பு : விவசாயிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

திருப்பூர் : புதிதாக அமைய உள்ள நெடுஞ்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் இருக்கையை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

திருப்பூர் : புதிதாக அமைய உள்ள நெடுஞ்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் இருக்கையை முற்றுகையிட்டு மனு அளித்தனர். 

திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் மற்றும் பல்லடம் பகுதிகளுக்குட்பட்ட விவசாய நிலங்கள் வழியாக கோவை– கரூர் நெடுஞ்சாலை திட்டம் கொண்டுவரப்பட உள்ளது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விவசாய நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியைக் கண்டித்தும், காங்கேயம் மற்றும் பல்லடம் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி இருக்கை அருகே எழுந்து வந்து முற்றுகையிட்டனர். 

இதனால், குறை தீர்க்கும் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் மாவட்ட ஆட்சியர் விவசாயிகளை மனுவாக அளிக்க வலியுறுத்தியதை அடுத்து விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால் விவசாயிகளின் நிலம் துண்டாடப்பட்டு விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும் எனவும், நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால் இழப்பீடாக விவசாயிகளுக்கு சந்தை மதிப்பில் இருந்து 5 மடங்கு உயர்த்தி வழங்க வேண்டும் எனவும், நெடுஞ்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்...

புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனத்தில் விநாயகருக்கு ராஜ அலங்காரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனம் மற்றும் இரண்டு டன் மலர்களால் ரா...

வரசித்தி விநாயகருக்கு வெள்ளி கவசம் - ரூ.10 லட்சம் நோட்டுகளால் அலங்காரம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெ...