கோவையில் அதிகாரிகள் சோதனை : 48 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

கோவை : கோவை மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதில் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 48 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவை : கோவை மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதில் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 48 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகார்களை அடுத்து இன்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். காந்திபுரம், உக்கடம், ரங்கே கவுண்டர் வீதி ஆகிய பகுதிகளில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, தடை செய்யப்பட புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 48 கிலோ அடியுள்ள புகையிலைப் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

பழ மார்க்கெட்







இதே போல், உக்கடம் பழ மார்க்கெட் பகுதியில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, உபயோகிக்க முடியாத நிலையில், விற்பனை செய்யப்பட இருந்த 2.5 டன் ஆரஞ்சுகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.60 ஆயிரம் என்று கூறப்படுகிறது. மேலும், கலப்படம் செய்யப்பட்ட டீ தூள், காலாவதியான குளிர்பானங்கள், ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. கோவையில் இந்த ஆய்வு தொடர்ந்து நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்...